Post Tagged as ‘Pastor’s Blog’

போதகரின் தனிப்பட்ட ஜெபம் – ஜாப் சாங். The Pastor’s Private Prayer – Geoff Chang.

போதகரின் குணத்தை பற்றிய இந்தத் தொடரில் இதுவரை, போதகரின் பக்தி மற்றும் அவரது ஊழியத்தின் மீது போதகரின் பரிசுத்தத்தின் பங்கைக் கருத்தில் கொண்டோம். அந்த கட்டுரைகள் பெரும்பாலும் எச்சரிக்கையாக இருந்தன, ஊழியத்தில் வரும் குறிப்பிட்ட சோதனைகளுக்கு எதிராக போதகர்களை எச்சரித்தன. ஆனால் போதக குணத்தில் வளர ஒரு போதகர் நேர்மறையாக எதை வளர்க்க வேண்டும்? ஸ்பர்ஜனின் முதல் பதில், போதகரின் தனிப்பட்ட ஜெபத்தில் வெளிப்படுத்தும், கிறிஸ்துவுடன் கூடிய ஐக்கியத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை கொண்டிருப்பதே ஆகும். பிரச்சனை : ஊழியத்தில் அதிகாரப்போக்கு ஒரு ஊழியன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்று, சம்பிரதாயம் அல்லது அதிகாரப்போக்கு என்று ஸ்பர்ஜன்  அழைக்கிறார். அவர் சொல்லுவதை இங்கு கவனியுங்கள்:   “ஒரு ஊழியன் சந்திக்கக்கூடிய மிக மோசமான சோதனை, ஒரு அதிகாரபோக்குள்ள நடவடிக்கையின்படி செய்வதாகும். ஒரு அதிகாரப்போக்கு கொண்ட ஊழியனாக கடமைக்கென்று வேத வாசிப்பது, அவ்வண்ணமாக ஜெபிப்பது, அனைத்து ஆவிக்குரிய காரியங்களை தனிப்பட்ட விதத்தில் எடுத்துக்கொள்ளாமல், ஊழியன் […]

Read More

போதகரின் தனிப்பட்ட பரிசுத்தம்- ஜாப் சாங். The Pastor’s Personal Holiness – Geoff Chang.

போதக கல்லூரி மாணவர்களுக்கு, சி.எச்.ஸ்பர்ஜன் அவர்களுடன் கூடுகிற வெள்ளிக்கிழமை கூட்டங்கள் என்றாலே, மிகுந்த சந்தோஷமான நாள்தான். ஆனால், அதில் ஒரு கூட்டம், மிகுந்த வேதனையை தரும்படியாய் இருந்தது. அது என்னவென்றால், அவர் அதிகம் நம்பியிருந்த ஒரு ஊழியர், கல்லூரியை முடித்து, வெளியே சென்றவர்,  பெரிதான விதத்தில் வீழ்ச்சியை சந்தித்தார் என்ற ஒரு செய்தி ஸ்பர்ஜனிடத்தில் வந்து சேர்ந்தது. ஸ்பர்ஜன் அவர்கள் தனிப்பட்ட பரிசுத்தத்தை மிகுந்த கவனத்தோடு கையாளுவார் என்று மாணவர்களுக்கு தெரியும். இப்பொழுது, அச்செய்தியை கேட்டவராய், தன்னுடைய மாணவர்களுக்கு, அறிவுரை கொடுக்கும்படியாய் எழுந்தார்.   “தன்னுடைய சட்டையின் கையை சுருட்டிக்கொண்டு, கனத்த குரலுடன், அவர், இவ்வாறு கூறினார், “சகோதரரே, இவ்வாறு நடப்பதற்கு பதிலாக என்னுடைய வலது கை வெட்டப்பட்டு இருந்தாலும் கூட நலமாக இருக்கும்.” ஒரு ஊழியக்காரரின் வீழ்ச்சியானது, சபைக்கும், சுவிசேஷ பரவுதலுக்கும், மிகுந்த அவமானத்தை கொண்டுவரும் என்று ஸ்பர்ஜன் அறிந்திருந்தார். ஆண்டவருடைய பிள்ளைகளுக்கு, இப்படிப்பட்ட ஆவிக்குரிய தீங்கு வருவதைக் காண்பதை […]

Read More

ஒரு போதகரின் குணம் – ஜாப் சாங். The Pastor’s Character – Geoff Chang.

ஸ்பர்ஜன் அவர்களுக்கு, தனது சபையான மெட்ரோ பாலிடன் டேபர்நேகல்(Metropolitan Tabernacle) மூலம் செயல்படும் பல்வேறு பணிகளில் ஒன்று, போதக கல்லூரி ஆகும். அது அவருடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இருந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மதியம், நீண்ட வாரப் படிப்புக்குப் பிறகு, ஸ்பர்ஜன் போதக ஊழியம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பாடம் எடுப்பது மாணவர்களின் விருப்பமான நேரங்களில் ஒன்றாகும். அவர் பிரசங்கித்த பல தலைப்புகளில், அவர் மிகவும் வலியுறுத்தியது போதகரின் “மேம்பட்ட பக்தியின்”(Eminent Piety) முக்கியத்துவம், அதாவது, அப்போதகரின், குணம். பல திறமையான போதகர்கள், பல பெரிய ஊழியர்கள், அவர்கள் தனிப்பட்ட வாழ்விலும், குணத்திலும், வழிதவறி செல்லும் நாட்களில் நாம் இன்று வாழ்கிறோம். அதன் விளைவாக, அனைத்து ஊழியங்களும் வீழ்ச்சியடைகின்றன. 19 ம் நூற்றாண்டிலும் நாம் இந்த நிலைமையை பார்க்கலாம். ஸ்பர்ஜன் அவர்கள், இதை தெளிவாக புரிந்திருந்தார். அதினால்தான், போதகர்களாக விரும்பும் மாணாக்கர்களுடைய வாழ்வில், “மேம்பட்ட பக்தி” யை முதலாவது தகுதியாக […]

Read More

நீங்கள் பாதுகாப்பான பகுதியில் இருக்கிறீர்களா? – Safety Zone. – Dr.David S.Steele.

சங்கீதம் 2 ஆம் அதிகாரத்தின் தொடக்க வசனங்கள், தேவனுடைய அதிகாரத்திற்கு கீழ்படிய மறுக்கும் கலககாரர்களை பற்றி சொல்லுகிறது. அத்தேவனை வீழ்த்தத் தயாராக இருக்கும் கலகக்காரர்களின் தோரணையை இந்தப் பகுதி வெளிப்படுத்துகிறது. இந்தக் கலகக்காரர்கள் தேவனுக்கு எதிராகக் கோபப்பட்டு அவருக்கு எதிராக சதி திட்டம் தீட்டுகிறார்கள். (வச 1). அவர்கள் கர்த்தரையும் அவர் அபிஷேகம்பண்ணப்பட்டவரையும் எதிர்க்கிறார்கள். (வச 2). இந்த கலகக்காரர்கள். சுயாட்சியை தங்கள் இறுதி இலக்காகக் கொண்டுள்ளனர். (வச. 3). அவர்கள், தேவனுடைய எதிர்பார்ப்புகளிலிருந்தும், அவருடைய கட்டளைகளிலிருந்து விடுபட விரும்புகிறார்கள். இந்த ஒத்துழைப்பில்லாத கலகக்காரர்கள், தேவனுடைய ஆளுகையிளிருந்தும், அவருடைய ஆட்சியிலிருந்தும் விடுதலையை நாடுகிறார்கள். விசித்திரமான உண்மை இங்கே என்னவென்றால்,  கடவுளை விட்டு, தன் இஷ்டத்திற்கு போகும் கலகக்காரர் ஒவ்வொருவரும் அடிமைத்தனத்தில் உள்ளனர், மேலும் இறுதியாக, தேவனுடைய சர்வவல்லமையுள்ள கோபத்திற்கு உரியவர்களாய் உள்ளனர். கிறிஸ்துவை விட்டு நீங்கள் தப்பி ஓடும்போது, ​​உங்கள் வாழ்க்கையைச் சுற்றி சுயமாக விதிக்கப்பட்ட  ஒரு சிறையை உருவாக்குகிறீர்கள். மற்றொரு […]

Read More

உன்னுடைய ஜெப வாழ்க்கை எவ்விதமாக இருக்கிறது? – மார்டின் லாயிட் ஜோன்ஸ். How’s Your Prayer Life? – Martyn Lloyd-Jones

உன்னுடைய ஆவிக்குரிய வாழ்வில், ஜெபம் எந்த இடத்தில் இருக்கிறது? நம்முடைய  வாழ்வில் அதற்கு என்னவிதமான  முக்கியத்துவத்தை கொண்டிருக்கிறோம்? உங்கள் அனைவருக்கும் நான் விடுக்கும் கேள்வி இதுவே. வேதத்தை நன்கு அறிந்தவரும், அதன் கோட்பாடு மற்றும் இறையியலைப் பற்றிய அறிவும் உள்ள மனிதருக்கு அது எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு இந்த கேள்வி அனைவருக்கும் அவசியம். நம்முடைய வாழ்வில் ஜெபம் எந்த இடத்தை கொண்டுள்ளது? எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது? ஜெபம் இல்லையென்றால், நாம் சோர்வடைந்து, வீழ்ந்து விடுவோம் என்று உணர்கிறோமா? கிறிஸ்தவர்களாய், நாம் எங்கு நிற்கிறோம் என்பதை நம்முடைய ஜெப வாழ்க்கையே தீர்மானிக்கிறது. வேத அறிவு மற்றும் அதை விளங்கி கொள்ளுதலைவிட, ஜெபம் மிக முக்கியமானதாய் இருக்கிறது. இங்கே, நான் வேத அறிவை வளர்த்துக்கொள்ள கூடாது நான் சொல்லவில்லை. என்னுடைய வாழ்நாளில், சத்தியத்தை கற்றுக்கொள்வதிலும், அதை புரிந்து கொள்வதிலும் அனேக நேரங்கள் செலவழித்ததுண்டு. இதுவும் முக்கியம்தான். ஆனால், ஒன்றே ஒன்று, எல்லாவற்றை […]

Read More

உபத்திரவத்தில் ஆறுதல் – தொமஸ் வாட்சன். A Consolation in Affliction – Thomas Watson.

“கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.” (சங்கீதம் 119:65) சங்கீதங்கள், வேதத்தின் முக்கிய அம்சமாய் இருக்கிறது. அவை நம்முடைய மகிழ்ச்சிக்காகவும் மற்றும் பிரயோஜனத்திற்காகவும் உள்ளன. ஆம், இவை, நம்மை திருப்திபடுத்த மாத்திரமல்ல, பெலப்படுத்தும்படியாகவும் உள்ளது. இந்த சங்கீதம் தெய்வீக மற்றும் ஆவிக்குரிய விஷயங்களால் நிறைந்திருப்பத்தை நாம் பார்க்கலாம்.  இவ்வசனத்தை நாம் இரண்டாக பிரிக்கலாம். 1. தேவன் தாவீதுக்கு காண்பித்த இரக்கம்: அவர் அவனை நன்றாய் நடத்தினார். 2. தாவீதின் நன்றியுள்ள அறிக்கை: “கர்த்தாவே, உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்” தாவீதினிடத்தில், தேவன் காண்பித்த இரக்கத்தை கொண்டு, நாம் இங்கே கவனிக்க வேண்டியது: உபதேசம் 1 தேவன் தம்முடைய மக்களை நன்றாய் நடத்துகிறவராய் இருக்கிறார். “தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்.” (ஆதி 33:11).அனேக வேளைகளில், தேவனுடைய பிள்ளைகள், அவருடைய அன்புக்கு பாத்திரவான்களாய் நடந்து கொள்ளுகிறதில்லை. அப்படி அவர்கள் செயல்பட்டாலும், தேவன், அவர்களை நன்றாகவே நடத்துகிறவராய் இருக்கிறார். தேவன் தம் மக்களுடன் […]

Read More

உங்களுடைய ஆவிக்குரிய பகுத்தறிவை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? — டஸ்டின் பென்ஞ்

How to Develop Your Spiritual Discernment – Dustin Benge. நாம் உலகத்தையே ஒரு கைக்குள் அடக்கி செல்லுகிறோம். உலகத்தில் நிகழ்கிற அனைத்து நிகழ்ச்சிகள், அரசியல், கலாச்சாரம், கட்டுரைகள், எப்போதும் ஓயாத முக்கிய செய்திகள் ஆகியவற்றினால் நாம் முடிவில்லாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளோம். நமது கிரகத்தில் உள்ள 3.5 பில்லியன் மக்கள் இந்த வகை ஊடகங்களின் பயனர்களாகவும் நுகர்வோராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் அளிக்கிறது. உண்மையில், சொல்லப்போனால், நம்மில் பெரும்பாலோர் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று மணிநேரம் இந்த இடைவிடாத சரமாரியான தகவல்களுடன் ஈடுபடுகிறவர்களாய் இருக்கிறோம். கடந்த பல மாதங்களாக, செய்திகளும் சமூக ஊடகங்களும் எவ்வளவு விரைவாக அச்சத்தையும், கோபத்தையும், மற்றும் பல்வேறு இயக்கங்களை தூண்டும் விதத்தில் இருந்ததை நாம் பார்த்திருக்கிறோம். இந்த தகவல் சுமை சில சமயங்களில் நம்மால் தாங்க முடியாததை விட அதிகமாகவும், மேலும், நாம், எதை நம்புவது என்பதை அறிய முயற்சிப்பதினால், விசுவாசிகளையும், அவிசுவாசிகளையும் ஒரே […]

Read More

சீர்திருத்த இறையியல்: எல்லா மகிமையும் தேவன் ஒருவருக்கே – ஜாஷ்வா மில்ஸ். Reformation Theology: Soli Deo Gloria – Joshua Mills.

சோலி டியோ க்ளோரியா (Soli Deo Gloria) – எல்லா மகிமையும் தேவன் ஒருவருக்கே – என்ற முழக்கம் சீர்திருத்தம் ஏற்பட்ட நாள் முதல் வந்ததாகும். அவருடைய கிருபையின் ஐஸ்வரியத்தின்படியே, நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். இதுவே கிறிஸ்தவத்தின் உயிர் நாடியாக இருக்கிறது. இவை அனைத்தும், தேவனுடைய மகிமைக்கேதுவாக, நடத்தி செல்லுகிறது. வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை, பின்வரும் சரியான கேள்வியை கேட்கிறது. மனிதன் படைக்கப்பட்டதின் பிரதான நோக்கம் என்ன? வேறு விதத்தில் கேட்போமானால், மனிதன் எதற்காக படைக்கப்பட்டான்? அவனுடைய வாழ்வின் நோக்கம் என்ன? இதற்குண்டான பதில்: மனிதனின் பிரதான நோக்கம், தேவனை மகிமைப்படுத்தவும், அவரில் என்றென்றும் மகிழ்ச்சியாய் இருப்பதுமே ஆகும். (ரோமர் 11:36). கிறிஸ்துவின் இரத்தத்தினாலே, மீட்கப்பட்ட நாம் ஒவ்வொருத்தரும், , ஒரே ஒரு வேட்கையோடு வாழ வேண்டும்:  அதுவே, “எல்லா மகிமையும் தேவன் ஒருவருக்கே”. நம்முடைய அனைத்து செயலிலிருந்து வெளிப்படுவது : தேவன் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக! என்பதே. நம்முடைய வாழ்க்கையின் அனைத்து […]

Read More

இந்த விசுவாசம் உங்களுக்கு இருக்கிறதா? – ஜே.சி.ரைல். Have you got this faith? – J.C.Ryle.

“விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,   இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.”                          (எபிரெயர் 12:24-27)        மோசே புறக்கணித்தது. 1. மோசே, பதவியையும், மேன்மையையும் விட்டு கொடுத்தான். 2. மோசே, பாவ சந்தோஷங்களை புறக்கணித்தான். 3. மோசே, எகிப்தின் பொக்கிஷங்களை புறக்கணித்தான்.        மோசே ஏற்றுக்கொண்டது. 1. மோசே, உபத்திரவத்தையும், பாடுகளையும் ஏற்றுக்கொண்டான். 2. மோசே, அசட்டை பண்ணப்பட்ட, தேவனுடைய ஜனங்களின் நட்பை ஏற்றுக்கொண்டான். 3. மோசே, அவமானத்தையும், அவமதிப்பையும் ஏற்றுக்கொண்டான்.  இவையெல்லாம் மோசேயால் எப்படி செய்ய முடிந்தது? மோசேக்கு விசுவாசம் இருந்தது. அவனது அற்புதமான நடத்தைக்கு, விசுவாசம் முக்கிய ஆதாரமாக இருந்தது. விசுவாசம், அவன் செய்ததை செய்யவும், அவன் […]

Read More

சுய-ஒழுக்கம் (இச்சையடக்கம்) என்றால் என்ன? – Dr.ஸ்டீவன் லாசன். What is Self-Discipline? – Dr.Steven Lawson.

தனிப்பட்ட பரிசுத்த வாழ்வின் வளர்ச்சியானது, நம்முடைய சுய – ஒழுக்கத்தின் வளர்ச்சியின் அடிப்படையிலேயே அதிகமாக தீர்மானிக்கப்படுகிறது. இந்த அடிப்படையான ஒழுக்கம் இல்லாமல், கிறிஸ்துவின் கிருபையில் முன்னேறுவதில் சாத்தியமில்லை. வீட்டிலோ, தொழிலிலோ, அல்லது சபையிலோ இவ்விதமான இடங்களில் ஒழுக்கத்தை கடைபிடிப்பதற்கு முன்பு, சுய – ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது மிக அவசியம். உண்மையை சொல்லப்போனால், இன்றைய நாட்களில், தனிப்பட்ட ஒழுக்கம், அதிகம் விரும்பபடாத ஒரு காரியமாயிருக்கிறது. நம்முடைய சமுதாயத்தில், பெரும்பாலும் பல கிறிஸ்தவர்கள் மத்தியில் கூட, சுய – ஒழுக்கத்திற்கான எந்த ஒரு வலியுறுத்தலும் எதிர்க்கப்படுகிறது. சட்டவாதம் பேசுபவர்கள், சுய ஒழுக்கமானது, அவர்களுடைய கிறிஸ்தவ சுதந்திரத்தின்  உரிமைகளை பறிப்பது போல, உணர்ந்து, கூக்குரலிடுகிறார்கள். இந்த சுதந்திர எண்ணம் கொண்ட விசுவாசிகள், தனி ஒழுக்கமானது, தங்களுடைய கிறிஸ்துவுக்குள்ளான சுதந்திரத்தை பறித்து, ஒரு சிறு வட்டத்திற்குள் அவர்களை கொண்டுவருவதுபோல உணர்கிறார்கள். ஆனால், இவ்விதமான அனேக விசுவாசிகள், கிறிஸ்துவுக்குள் உள்ள அவர்களுடைய சுதந்திரத்தை தவறான விதத்தில் கையாண்டு, அதினிமித்தம், […]

Read More