Post Tagged as ‘Pastor’s Blog’

ஆண்டவரே, என்னை தாழ்மையுள்ளவனாக உருவாக்கும், வைத்துக்கொள்ளும். – சி.எச்.ஸ்பர்ஜன். Lord, make and keep me humble! – C.H.Spurgeon.

Lord, make and keep me humble! – C.H.Spurgeon. ஆண்டவரே, என்னை தாழ்மையுள்ளவனாக உருவாக்கும், வைத்துக்கொள்ளும். “இதோ, நான் நீசன்!” யோபு 40:4 இதோ, நான் நீசன்!”யோபு 40: 4 வானத்தை நோக்கி செல்லும் ஒரு கோபுரமாக இருக்கட்டும், அல்லது சிகரமாக இருக்கட்டும். அது மேலே போக போக குறுகிப்போகும். அதேபோல், நாம் எவ்வளவு பரிசுத்தமானவர்களாக இருக்கிறோமோ – அவ்வளவுக்களவு நம்மை குறித்து  நாம் குறைத்து மதிப்பிடுவோம். நம்முடைய சுயத்தின் சிறந்த எண்ணங்களும், மகத்துவமுள்ள கிருபையும்-ஒருபோதும் ஒன்றாகச் செல்லாது. எங்கு பெரிய சுய மதிப்புக்குரிய உணர்வு இருக்கிறதோ  –  கிருபையின் மகத்துவம் அங்கு இல்லை என்பதற்கான உறுதியான அறிகுறியாகும். தன்னை மிகைப்படுத்திக் கொண்டவன் தன் இரட்சகரை குறைத்து மதிப்பிடுகிறான். பக்தியில் நிறைந்தவர் – மனத்தாழ்மையால் நிரப்பப்படுவது உறுதி. ஆம், தேவனுடைய மக்களில் மிகச் சிறந்தவர்கள் தங்களையே வெறுக்கிறார்கள். வைக்கோல் மற்றும் இறகுகள் போன்ற லேசான விஷயங்கள் மேலே உயரச் செல்கின்றன. […]

Read More

பவுலின் ஏழு விருப்பங்கள்.

— ஜேம்ஸ் ஸ்மித் Paul’s Seven Wishes – James Smith – 1856 James Smith, 1856 விரும்புவது பொதுவாக பலனற்றது, சில சமயங்களில் பாவமானது கூட. எதையாகிலும்  விரும்புவதை காட்டிலும்  அமைதியாயிருப்பாதே சிறந்தது, மேலும் கடவுளுடைய சித்தத்தை ஏற்றுக்கொண்டு, அமைதியாயிருப்பது இன்னும் மேலானது. ஆனால் நாம் நல்லதாக கருதுவதை விரும்புவது இயற்கையானது – மேலும் கிருபை மட்டுமே இயற்கையாக இந்த பயிற்சியை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் பரிசுத்தப்படுத்துகிறது. ஆசை என்பது பெரும்பாலும் அறிவின் விளைவு – அது ஜெபத்தின் ஆத்மா. நம்மிடம் எது இருந்தாலும், நமக்குத் தேவையானவை நிறைய உள்ளன, இதன் விளைவாக, நாம் விரும்ப வேண்டியது அதிகம். பவுல் குறிப்பாக ஏழு விஷயங்களை விரும்பினார், அவைகள் அனைத்தும் கிறிஸ்துவை பற்றியது, அவைகள் அனைத்தும் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவைகளை சற்று நான் பார்க்க ஆசைபடுகிறேன். நாம் இதை தியானிக்கும்போது, நம்முடைய ஆசைகளை பவுலுடைய ஆசையுடன் ஒப்பிடுவோம், இந்த […]

Read More

தேவனுக்கு முன்பாக காணப்படும் செம்மையான (மனந்திரும்பின)இருதயத்தின் ஏழு அடையாளங்கள். — ஜே.சி. ரைல்.

7 Marks of a Right Heart Before God  — J.C.Ryle 1.ஒரு செம்மையான இருதயம் புதிய இருதயமாய் இருக்கிறது. (எசே 36:26)         இந்த புதிய இருதயத்தோடு ஒருவன் பிறக்கிறதில்லை, மாறாக பரிசுத்த ஆவியானவர் அருளிச்செய்கிற மற்றுமொரு இருதயமாயிருக்கிறது. இப்படிப்பட்ட இருதயமானது, புதிய ஆசைகள், புதிய சந்தோஷங்கள், புதிய கவலைகள், புதிய நம்பிக்கைகள், புதிய பயங்கள், புதிய விருப்பங்கள், புதிய வெறுப்புகள் கொண்டதாயிருக்கிறது. ஆம், இப்படிப்பட்ட இருதயமானது, ஆத்துமா, கடவுள், கிறிஸ்து, இரட்சிப்பு, வேதம், ஜெபம், பரலோகம், நரகம், உலகம், பரிசுத்தம் போன்ற அனைத்து காரியங்களை குறித்தும் புதிய கண்ணோட்டத்தை கொண்டதாயிருக்கிறது. “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.” (2 கொரி 5:17) 2.ஒரு செம்மையான இருதயம் நொறுங்குண்ட நருங்குண்ட இருதயமாயிருக்கிறது. (சங்கீதம் 51:17) இந்த புதிய இருதயம்,  பெருமை, சுய-எண்ணம், சுய-நீதி ஆகியவற்றிலிருந்து உடைப்பட்ட இருதயம். ஒருகாலத்தில், சுயத்தை குறித்து மேலான […]

Read More

ஆவியில் வல்லமையாய் ஜெபிப்பது எப்படி? – Dr. ஜோயல் பீகி.

   How To Pray in Sprit Effectively?     -Dr. Joel Beeke. சார்ந்துக்கொள் அவரில் சார்ந்து ஜெபிக்கிற ஜெபமானது வல்லமை கொண்டது. ஜெபத்தை முதன்மைபடுத்து. ஜோன் பனியன் இவ்விதமாக கூறுகிறார், “நீ ஜெபிக்காத வரைக்கும், எந்த காரியத்தையும் நிறைவாய் செய்ய முடியாது. அதே சமயத்தில், நீ ஜெபித்த பின்பு செய்யும் காரியம் நிறைவாயிருக்கும்.” ஜெபத்தில் உள்ள இனிமையை கண்டுக்கொள். எனக்கு ஒன்பது வயதாயிருக்கும்போது என்னுடைய  அப்பா சொல்லுவார், ‘எப்பொழுதும் ஞாபகம் வைத்துக்கொள், ஒரு உண்மையான விசுவாசி செல்லுவதற்க்கான ஒரு இடம் உண்டு, அதுதான், கிருபாசனத்தண்டை. ஜெபம் என்பது அவரண்டை செல்லுவதற்கான கடவுளுடைய பரிசு.  அவர் ஜெப ஆவியை கொடுக்கிறவரும், ஜெபத்தை கேட்கிறவரும், ஜெபத்திற்கு பதில் அளிக்கிற கடவுளுமாய் இருக்கிறார்.’ வில்லியம் பிரிட்ஜ், இவ்விதமாக கூறுகிறார், ‘நான் எதற்காக ஜெபிக்கிறேனோ அதை நான் பெறாவிட்டாலும், ஜெபிப்பதே ஒரு இரக்கம்தான்.’  ஜோசப் ஹால், கூறுகிறார், ‘ஒரு நல்ல ஜெபம் ஒருபோதும் அழுதுக்கொண்டு […]

Read More

கோவிட்-19 பற்றி 19 போதக பார்வைகள்

கோவிட் 19 பற்றி   19 போதக பார்வைகள்  – பாஸ்டர். கொன்ரட் ம்பெவே   19 Pastoral Thoughts On Covid-19 – Pastor Conrad Mbewe                        1 கோவிட் 19 யை கொண்டு கடவுள் என்ன செய்கிறார்?   என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை. ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்துத் தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர். (ஏசாயா 45:6-7).  எந்த ஒரு மனிதனோ, சபையோ அல்லது தேசமோ, கடவுளுடைய சிந்தனைக்கு மேலாக எழும்பவே முடியாது. தற்போதைய உலகளாவிய பிரச்சனையான கொரொனோ வைரஸ் குறித்ததான எண்ணம், நிச்சயமாக இவ்வாறு காணப்படக்கூடும்: “கடவுள் தான் இந்த கொள்ளை நோயை அனுப்பியிருக்கிறாரோ?” பொதுவான பதில் என்னவாக இருக்கும், “ இல்லை, கடவுள் […]

Read More

மூன்று முத்தான முத்துக்கள் – 9

கிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்துவுக்குள் இருக்கிற நாம், காத்திருக்கிற ஜனங்கள். ஆம், பரலோக வாழ்வைப் பெற, அவருடைய இரக்கத்தினாலே வருகிற நித்தியமான வாழ்வைப் பெற, ஆவலோடு, எதிர்பார்த்து, பொறுமையுடன் காத்துக்கொண்டிருக்கிற ஜனங்கள். இப்படியாக, பொறுமையுடன் காத்துக்கொண்டிருக்கிற இந்த கிறிஸ்தவ வாழ்வில், மூன்று முத்தான முத்துக்களான அம்சங்களை நாம் கொண்டிருத்தல் மிக மிக அவசியம்.   “நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.” (யூதா20,21)                                                                                                                                                                  முதலாவதாக, நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில் காணப்படும் அடிப்படையான தேவை விசுவாசம் என்னும் நங்கூரம். இந்த விசுவாசம் சாதாரண விசுவாசம் அல்ல. Most Holy Faith – மகா பரிசுத்தமான விசுவாசம். இந்த விசுவாசம் ஜீவனுள்ள தேவன் பேரில் உள்ள விசுவாசம். இது ஒருகாலத்தில் காணப்படவில்லை. அவிசுவாசமான வாழ்க்கை மட்டும்தான் வைத்திருந்தோம். ஆனால், காத்திருக்கிறவர்களாகிய நாம், இப்பொழுதோ, […]

Read More

Helps Against Temptations

– Thomas Brooks (1608-1680). 1. Walk by rule : He that walks by rule walks most safely, most honourably, most sweetly. When men throw off the Word, then God throws off them, and then Satan takes them by the hand, and leads them into snares at his pleasure. He that thinks himself to be too good to be ruled by the Word, will be found too bad to be owned by God; and if God do not or will not own him, Satan will by his strategems overthrow him. They that keep to the rule, shall be kept in the […]

Read More

மூன்று முத்தான முத்துக்கள் – 8

“நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோட திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி, இவ்விதமாய்  மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.” (1 தெச 1:6,7). நாம் இங்கே ஒரு அருமையான சபையாரை பார்க்கலாம். அவர்கள்தான் தெசலோனிக்கே கிறிஸ்தவர்கள். இவர்கள் ஒரு காலத்தில், விக்கிரக வணக்கத்தை கொண்ட ஜனங்கள் (1 தெச 1:9).  ஆனால், இப்பொழுதோ, அந்த பொய்யான கடவுளை கைவிட்டு, ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு, அடிமையாய் வாழ்ந்து பணி செய்வதற்கு, தேவனிடத்திற்கு மனந்திரும்பினவர்கள். இவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்ட மூன்று முக்கியமான முத்துக்களைதான் நாம் இங்கே பார்க்க போகிறோம். ஏற்றுக்கொண்ட வாழ்வு முதலாவதாக, இவர்கள் ஒரு காலத்தில், பொய்யான கடவுளையும், பாவ இச்சைகளையும் ஏற்றுக்கொண்டு, ஜீவனுள்ள கடவுளுக்கு புறம்பாய் போனவர்கள். ஆனால், இன்றைக்கு ஜீவனுள்ள தேவனிடத்திற்கு மனந்திரும்பினவர்கள். ஏனென்றால், இவர்கள், திருவசனத்தை ஏற்றுக்கொண்டவர்கள். ஆம், தேவ வசனமாகவே ஏற்றுக்கொண்டவர்கள். இங்குதான் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, இவர்களுடைய இரட்சிப்பில், காரணமாய் […]

Read More

மூன்று முத்தான முத்துக்கள் – 7

நாம் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில், இயேசு ஆண்டவரை கொண்டவர்களாய், இயேசு கிறிஸ்துவை அறிந்தவர்களாய் இருப்போம் என்றால், பின்வரும் மூன்று முக்கியமான காரியங்களில் நாம் உடன் பங்காளர்களாய், அதாவது, அதோடு, நம்மை இணைத்துக்கொண்டு, அதில் நாம் பங்கு கொண்ட கிறிஸ்தவ வாழ்க்கை கொண்டிருக்கிறோம் என்று வேதம் தெளிவாக போதிக்கிறது. ஆம், வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரம் ஒன்பதாம் வசனத்தில், யோவான், இதை தெளிவாக கூறுவதை நாம் பார்க்கலாம். “உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும், அவருடைய ராஜ்யத்திற்கும், அவருடைய பொறுமைக்கும், உங்கள் உடன் பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான்…….” (வெளி 1:9). நாம் நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும். இம்மூன்று காரியங்களும், இயேசுகிறிஸ்துவினிமித்தம், இயேசுவினால் வருகிற, இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கிற அம்சங்களாகும்.  முதலாவதாக, உபத்திரவம். ஆம், நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில், உபத்திரவம், பிண்ணி பிணைந்து இணைக்கப்பட்ட ஒன்றாய் இருக்கிறது. இவ்வசனத்தில், சொல்லப்பட்ட வண்ணமாக, இயேசு ஆண்டவருக்காக, நாம் பாடுகளும், உபத்திரவங்களும், சந்திக்கிற கிறிஸ்தவ வாழ்க்கையை கொண்டிருக்கிறோம். […]

Read More

ஏன் தேவன் நம்முடைய ஜெபத்திற்கு பதில் கொடுக்க தாமதிக்கிறார்? – Dr.பீட்டர் மாஸ்டர்ஸ்.

    நமக்கு தொடர்ச்சியாக, பல்வேறு சூழ்நிலைகளில், தேவனுடைய உதவி தேவையாயிருக்கிறது. ஆம், ஆத்துமாக்களுக்காக, இடைவிடாமல் ஜெபிக்கிறோம். ஆனால், தேவன் ஏன் ஒரு சில காரியங்களுக்காக, மறுபடியும், மறுபடியும் இன்னும் சொல்லப்போனால், நீண்ட காலமாக ஜெபிக்க வைக்கிறார்? உண்மைதான், தேவன், ஜெபத்திற்கு பதில் அளிக்கிறவராய், விசேஷமாக, அவசரமான வேளையில், உடனடியாக பதில் கொடுக்கிறவராய் இருக்கிறார். ஆனால், அதேசமயத்தில், ஒவ்வொரு ஜெபிக்கிற கிறிஸ்தவனும், தன்னுடைய ஜெப வாழ்வில் அதிக காலம் காத்திருக்கிறவனாயும், இன்னும் சொல்லப்போனால், அனேக வருஷங்கள் காத்திருக்கிறவனாயும் இருக்கிறான்.     சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக அல்லது ஒரு ஆத்துமாவுக்காக, மறுபடியும், மறுபடியும் ஜெபிக்க வேண்டுமா என்று நாம் யோசிப்பது உண்டு. ஆம், கட்டாயம் ஜெபிக்க வேண்டும். ஏனென்றால், “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” என்று கொலோ 4:2ல் படிக்கிறோம். ஆனால், ஏன்? இப்படியாக ஜெபிப்பதில் தேவனுடைய திட்டம் என்ன? தேவன் தாமதிப்பதில் உள்ள ஐந்து காரணங்கள்   1.  நம்முடைய நோக்கம் […]

Read More