1.) விசுவாசம் ஆத்துமாவின் மிகப்பெரிதான பாதுகாவலன் எபேசியர் 4:16 ல் இவ்விதமாக படிக்கிறோம், “பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். ‘எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள்.’ உங்கள் போர் அணிகலன்கள் எதையும் தவிர்த்து விடாதீர்கள். ஆனால், எல்லாவற்றிக்கும் மேலாக, விசுவாசம் என்னும் கேடகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எப்படி கேடயம், சரீரத்தை பாதுகாக்கிறதோ, அவ்விதமாக ஒரு விசுவாசியின் ஆத்துமாவை, விசுவாசம் பாதுகாக்கிறது. ஆம், பிசாசினுடைய, எல்லாவித கொடிய, அக்கினியாஸ்திரங்களுக்கு எதிராக அவனை பாதுகாக்கிறது. விசுவாசம், ஆத்துமாவை வலிமையாக்குகிறது, விசுவாசம், ஆத்துமாவை வெற்றியுள்ளதாக்குகிறது, அது சிறைபிடிப்பை சிறைப்படுத்துகிறது, பிசாசை சங்கிலியினால் கட்டுகிறது, அது அவனை ஒவ்வொரு ஆயுதத்திலும் முறியடிக்கிறது. ஆகவே எல்லாவற்றிக்கும் மேலாக, விசுவாசத்தில் சிறப்பாய் வளர உழையுங்கள். 2) இரண்டாவதாக, விசுவாசத்தின் வளர்ச்சி, மற்ற அனைத்து கிருபையில் வளர உதவுகிறது. விசுவாசம் எவ்வளவு செழிப்பாய் இருக்கிறதோ, அந்த அளவுக்குத்தான், மற்ற கிருபைகளும் செழிப்பாய் இருக்கும். நீ […]
Read More