Post Tagged as ‘Pastor’s Blog’

யார் அந்த டேவிட் பிரைனெர்ட்? – டஸ்டின் பென்ஜ். Who Was David Brainerd? – Dustin Benge.

யார் அந்த டேவிட் பிரைனெர்ட்? 1747 ஆம் ஆண்டு ஒரு வசந்த நாளில், தனது குதிரையின் மீது ஏறி, பலவீனமான இருபத்தி ஒன்பது வயதான டேவிட் பிரைனெர்ட் (1718-1747) நியூ இங்கிலாந்து போதகர் ஜொனதன் எட்வர்ட்ஸின் நார்தாம்டன் நகரில் உள்ள வீட்டிற்கு வந்து சேர்ந்தார். இந்த நாளுக்கு முன்பு, பிரைனெர்டும் எட்வர்ட்ஸும் ஒருவருக்கொருவர் கேள்விபட்டிருந்தும், சந்திக்காதவர்களாய் இருந்தனர். இருப்பினும், 1747 ஆம் ஆண்டு கோடை காலம், அமெரிக்க சுவிசேஷத்தின் வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க மிஷனரி வாழ்க்கை வரலாற்றில் உச்சக்கட்டமாக, இந்த இரு ஆண்களுக்கும் இடையே வளர்ந்து வரும் நட்பை வளர்த்தது. குழந்தைபருவம் மற்றும் விவரிக்க முடியாத மகிமை ஏப்ரல் 20, 1718 ஈஸ்டர் ஞாயிறு அன்று கனெக்டிகட்டில் உள்ள ஹடாமில், டேவிட் பிரைனெர்ட்,  ஏசேக்கியா மற்றும் டொரத்தி பிரைனெர்டுக்கு பிறந்த ஒன்பது குழந்தைகளில் ஒருவர். பிரைனெர்ட் குடும்பமானது, பக்தி வைராக்கியத்தின் வழியில் வந்த குடும்பம்.  டேவிட் பிரைனெர்டின் தகப்பனான எசேக்கியா, […]

Read More

தேவன் பேரில் ஆவல்! – தொமஸ் வாட்சன். Desiring God! – Thomas Watson.

“பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத்தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.” (சங்கீதம் 73:25). நாம் தேவன் பேரில் உண்மையான ஆவல் கொண்டிருக்கும்போது, நம்முடைய இருதயங்களில் தேவனுடைய இராஜ்யம் தங்கியிருப்பதை அறியலாம். இவ்விதமான, உணர்வை நாம் கொண்டிருக்கும்போது, அங்கு வாழ்வு உண்டு என்பதை அறிந்துகொள்ளலாம். தேவன் பேரில் உள்ள உண்மையான ஆவல், உண்மையானதாய்(Sincere) இருக்கிறது. நாம் தேவனை, அவருக்காக, அவருடைய உள்ளார்ந்த மேன்மைகளுக்காக ஆவல் கொள்கிறோம். கிறிஸ்துவின் கிருபையான பரிமளத்தைலத்தின் வாசனையானது, கன்னியர்கள் அவருக்குப் பின் செல்ல இழுக்கிறது.(உன் 1:3). ஒரு உண்மையான பரிசுத்தவான், தேவன் வைத்திருப்பதை மட்டும் வாஞ்சிக்கிறவனாய் மாத்திரமல்ல, அவரையே வாஞ்சிக்கிறவனாய் இருப்பான். அவருடைய வெகுமதிகளை மட்டும் வாஞ்சிப்பவனாய் மாத்திரமல்ல, அவருடைய பரிசுத்தத்தை வாஞ்சிக்கிறவனாய் இருப்பான். எந்த ஒரு மாயமாலக்காரனும், கடவுள் மேல் விருப்பம் கொள்ள முடியாது. ஒருவேளை அவருடைய பொக்கிஷங்களை விரும்பலாம், ஆனால், அவருடைய அழகில் விருப்பம் கொள்ள முடியாது. தேவன் பேரில் உள்ள உண்மையான […]

Read More

கிறிஸ்துவின் இரக்கம் – ஜோன் ஃப்லேவல். (1628-1691) The Mercy of Christ – John Flavel.(1628-1691)

முதலாவது, அவர் இலவசமானவராய் காணப்படுகிறார். இதினிமித்தம், அவர் தேவனுடைய ஈவு என்று யோவான் 4:10 ல் பார்க்கிறோம். இவர் எவ்விதமாய் இலவசமாய் காணப்படுகிறார், என்று பார்ப்போமானால், ரோமர் 5:8 ன் படி நாம் சத்துருக்களாய் இருக்கையில், தேவன், அவரை நமக்காக கொடுத்தார் என்று பார்க்கிறோம். ஆம், இரக்கம், இலவசமானது மட்டுமல்ல, அது தகுதியற்ற நபருக்கு கொடுக்கப்பட்டது. இது கர்த்தருடைய கொடை. முழுக்க, முழுக்க அவருடைய ஈவாகவே காணப்படுகிறது. (யோவான் 3:16). இரண்டாவதாக, கிறிஸ்துவானவர், இரக்கம் நிறைந்தவராய் இருக்கிறார். கோபம் நிறைந்த கடவுளை திருப்தி செய்ய, கிறிஸ்து மாத்திரமே வழியாய் இருக்கிறார். ஆத்துமாவின் தேவையை சந்திக்க அவர் ஒருவரே வழியாய் இருக்கிறார். கிறிஸ்து ஒருவரே, இரக்கத்தில், விஸ்தாரமானவராகவும், தீவீரமானவராகவும் இருக்கிறார். அவரில் மாத்திரமே அனைத்து விதமான இரக்கங்களை கொண்டிருக்கிறார். அவரில் மாத்திரமே, பரீபூரண மற்றும், உயர்ந்த அளவு கொண்ட இரக்கத்தை கொண்டிருக்கிறார். சகல பரீபூரனமும், அவருக்குள்ளே வாசமாய் இருக்கும்படியாக, பிதாவானவருக்கு, பிரியமாயிற்று. (கொலோ […]

Read More

போதகரின் தனிப்பட்ட ஜெபம் – ஜாப் சாங். The Pastor’s Private Prayer – Geoff Chang.

போதகரின் குணத்தை பற்றிய இந்தத் தொடரில் இதுவரை, போதகரின் பக்தி மற்றும் அவரது ஊழியத்தின் மீது போதகரின் பரிசுத்தத்தின் பங்கைக் கருத்தில் கொண்டோம். அந்த கட்டுரைகள் பெரும்பாலும் எச்சரிக்கையாக இருந்தன, ஊழியத்தில் வரும் குறிப்பிட்ட சோதனைகளுக்கு எதிராக போதகர்களை எச்சரித்தன. ஆனால் போதக குணத்தில் வளர ஒரு போதகர் நேர்மறையாக எதை வளர்க்க வேண்டும்? ஸ்பர்ஜனின் முதல் பதில், போதகரின் தனிப்பட்ட ஜெபத்தில் வெளிப்படுத்தும், கிறிஸ்துவுடன் கூடிய ஐக்கியத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை கொண்டிருப்பதே ஆகும். பிரச்சனை : ஊழியத்தில் அதிகாரப்போக்கு ஒரு ஊழியன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்று, சம்பிரதாயம் அல்லது அதிகாரப்போக்கு என்று ஸ்பர்ஜன்  அழைக்கிறார். அவர் சொல்லுவதை இங்கு கவனியுங்கள்:   “ஒரு ஊழியன் சந்திக்கக்கூடிய மிக மோசமான சோதனை, ஒரு அதிகாரபோக்குள்ள நடவடிக்கையின்படி செய்வதாகும். ஒரு அதிகாரப்போக்கு கொண்ட ஊழியனாக கடமைக்கென்று வேத வாசிப்பது, அவ்வண்ணமாக ஜெபிப்பது, அனைத்து ஆவிக்குரிய காரியங்களை தனிப்பட்ட விதத்தில் எடுத்துக்கொள்ளாமல், ஊழியன் […]

Read More

போதகரின் தனிப்பட்ட பரிசுத்தம்- ஜாப் சாங். The Pastor’s Personal Holiness – Geoff Chang.

போதக கல்லூரி மாணவர்களுக்கு, சி.எச்.ஸ்பர்ஜன் அவர்களுடன் கூடுகிற வெள்ளிக்கிழமை கூட்டங்கள் என்றாலே, மிகுந்த சந்தோஷமான நாள்தான். ஆனால், அதில் ஒரு கூட்டம், மிகுந்த வேதனையை தரும்படியாய் இருந்தது. அது என்னவென்றால், அவர் அதிகம் நம்பியிருந்த ஒரு ஊழியர், கல்லூரியை முடித்து, வெளியே சென்றவர்,  பெரிதான விதத்தில் வீழ்ச்சியை சந்தித்தார் என்ற ஒரு செய்தி ஸ்பர்ஜனிடத்தில் வந்து சேர்ந்தது. ஸ்பர்ஜன் அவர்கள் தனிப்பட்ட பரிசுத்தத்தை மிகுந்த கவனத்தோடு கையாளுவார் என்று மாணவர்களுக்கு தெரியும். இப்பொழுது, அச்செய்தியை கேட்டவராய், தன்னுடைய மாணவர்களுக்கு, அறிவுரை கொடுக்கும்படியாய் எழுந்தார்.   “தன்னுடைய சட்டையின் கையை சுருட்டிக்கொண்டு, கனத்த குரலுடன், அவர், இவ்வாறு கூறினார், “சகோதரரே, இவ்வாறு நடப்பதற்கு பதிலாக என்னுடைய வலது கை வெட்டப்பட்டு இருந்தாலும் கூட நலமாக இருக்கும்.” ஒரு ஊழியக்காரரின் வீழ்ச்சியானது, சபைக்கும், சுவிசேஷ பரவுதலுக்கும், மிகுந்த அவமானத்தை கொண்டுவரும் என்று ஸ்பர்ஜன் அறிந்திருந்தார். ஆண்டவருடைய பிள்ளைகளுக்கு, இப்படிப்பட்ட ஆவிக்குரிய தீங்கு வருவதைக் காண்பதை […]

Read More

ஒரு போதகரின் குணம் – ஜாப் சாங். The Pastor’s Character – Geoff Chang.

ஸ்பர்ஜன் அவர்களுக்கு, தனது சபையான மெட்ரோ பாலிடன் டேபர்நேகல்(Metropolitan Tabernacle) மூலம் செயல்படும் பல்வேறு பணிகளில் ஒன்று, போதக கல்லூரி ஆகும். அது அவருடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இருந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மதியம், நீண்ட வாரப் படிப்புக்குப் பிறகு, ஸ்பர்ஜன் போதக ஊழியம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பாடம் எடுப்பது மாணவர்களின் விருப்பமான நேரங்களில் ஒன்றாகும். அவர் பிரசங்கித்த பல தலைப்புகளில், அவர் மிகவும் வலியுறுத்தியது போதகரின் “மேம்பட்ட பக்தியின்”(Eminent Piety) முக்கியத்துவம், அதாவது, அப்போதகரின், குணம். பல திறமையான போதகர்கள், பல பெரிய ஊழியர்கள், அவர்கள் தனிப்பட்ட வாழ்விலும், குணத்திலும், வழிதவறி செல்லும் நாட்களில் நாம் இன்று வாழ்கிறோம். அதன் விளைவாக, அனைத்து ஊழியங்களும் வீழ்ச்சியடைகின்றன. 19 ம் நூற்றாண்டிலும் நாம் இந்த நிலைமையை பார்க்கலாம். ஸ்பர்ஜன் அவர்கள், இதை தெளிவாக புரிந்திருந்தார். அதினால்தான், போதகர்களாக விரும்பும் மாணாக்கர்களுடைய வாழ்வில், “மேம்பட்ட பக்தி” யை முதலாவது தகுதியாக […]

Read More

நீங்கள் பாதுகாப்பான பகுதியில் இருக்கிறீர்களா? – Safety Zone. – Dr.David S.Steele.

சங்கீதம் 2 ஆம் அதிகாரத்தின் தொடக்க வசனங்கள், தேவனுடைய அதிகாரத்திற்கு கீழ்படிய மறுக்கும் கலககாரர்களை பற்றி சொல்லுகிறது. அத்தேவனை வீழ்த்தத் தயாராக இருக்கும் கலகக்காரர்களின் தோரணையை இந்தப் பகுதி வெளிப்படுத்துகிறது. இந்தக் கலகக்காரர்கள் தேவனுக்கு எதிராகக் கோபப்பட்டு அவருக்கு எதிராக சதி திட்டம் தீட்டுகிறார்கள். (வச 1). அவர்கள் கர்த்தரையும் அவர் அபிஷேகம்பண்ணப்பட்டவரையும் எதிர்க்கிறார்கள். (வச 2). இந்த கலகக்காரர்கள். சுயாட்சியை தங்கள் இறுதி இலக்காகக் கொண்டுள்ளனர். (வச. 3). அவர்கள், தேவனுடைய எதிர்பார்ப்புகளிலிருந்தும், அவருடைய கட்டளைகளிலிருந்து விடுபட விரும்புகிறார்கள். இந்த ஒத்துழைப்பில்லாத கலகக்காரர்கள், தேவனுடைய ஆளுகையிளிருந்தும், அவருடைய ஆட்சியிலிருந்தும் விடுதலையை நாடுகிறார்கள். விசித்திரமான உண்மை இங்கே என்னவென்றால்,  கடவுளை விட்டு, தன் இஷ்டத்திற்கு போகும் கலகக்காரர் ஒவ்வொருவரும் அடிமைத்தனத்தில் உள்ளனர், மேலும் இறுதியாக, தேவனுடைய சர்வவல்லமையுள்ள கோபத்திற்கு உரியவர்களாய் உள்ளனர். கிறிஸ்துவை விட்டு நீங்கள் தப்பி ஓடும்போது, ​​உங்கள் வாழ்க்கையைச் சுற்றி சுயமாக விதிக்கப்பட்ட  ஒரு சிறையை உருவாக்குகிறீர்கள். மற்றொரு […]

Read More

உன்னுடைய ஜெப வாழ்க்கை எவ்விதமாக இருக்கிறது? – மார்டின் லாயிட் ஜோன்ஸ். How’s Your Prayer Life? – Martyn Lloyd-Jones

உன்னுடைய ஆவிக்குரிய வாழ்வில், ஜெபம் எந்த இடத்தில் இருக்கிறது? நம்முடைய  வாழ்வில் அதற்கு என்னவிதமான  முக்கியத்துவத்தை கொண்டிருக்கிறோம்? உங்கள் அனைவருக்கும் நான் விடுக்கும் கேள்வி இதுவே. வேதத்தை நன்கு அறிந்தவரும், அதன் கோட்பாடு மற்றும் இறையியலைப் பற்றிய அறிவும் உள்ள மனிதருக்கு அது எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு இந்த கேள்வி அனைவருக்கும் அவசியம். நம்முடைய வாழ்வில் ஜெபம் எந்த இடத்தை கொண்டுள்ளது? எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது? ஜெபம் இல்லையென்றால், நாம் சோர்வடைந்து, வீழ்ந்து விடுவோம் என்று உணர்கிறோமா? கிறிஸ்தவர்களாய், நாம் எங்கு நிற்கிறோம் என்பதை நம்முடைய ஜெப வாழ்க்கையே தீர்மானிக்கிறது. வேத அறிவு மற்றும் அதை விளங்கி கொள்ளுதலைவிட, ஜெபம் மிக முக்கியமானதாய் இருக்கிறது. இங்கே, நான் வேத அறிவை வளர்த்துக்கொள்ள கூடாது நான் சொல்லவில்லை. என்னுடைய வாழ்நாளில், சத்தியத்தை கற்றுக்கொள்வதிலும், அதை புரிந்து கொள்வதிலும் அனேக நேரங்கள் செலவழித்ததுண்டு. இதுவும் முக்கியம்தான். ஆனால், ஒன்றே ஒன்று, எல்லாவற்றை […]

Read More

உபத்திரவத்தில் ஆறுதல் – தொமஸ் வாட்சன். A Consolation in Affliction – Thomas Watson.

“கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.” (சங்கீதம் 119:65) சங்கீதங்கள், வேதத்தின் முக்கிய அம்சமாய் இருக்கிறது. அவை நம்முடைய மகிழ்ச்சிக்காகவும் மற்றும் பிரயோஜனத்திற்காகவும் உள்ளன. ஆம், இவை, நம்மை திருப்திபடுத்த மாத்திரமல்ல, பெலப்படுத்தும்படியாகவும் உள்ளது. இந்த சங்கீதம் தெய்வீக மற்றும் ஆவிக்குரிய விஷயங்களால் நிறைந்திருப்பத்தை நாம் பார்க்கலாம்.  இவ்வசனத்தை நாம் இரண்டாக பிரிக்கலாம். 1. தேவன் தாவீதுக்கு காண்பித்த இரக்கம்: அவர் அவனை நன்றாய் நடத்தினார். 2. தாவீதின் நன்றியுள்ள அறிக்கை: “கர்த்தாவே, உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்” தாவீதினிடத்தில், தேவன் காண்பித்த இரக்கத்தை கொண்டு, நாம் இங்கே கவனிக்க வேண்டியது: உபதேசம் 1 தேவன் தம்முடைய மக்களை நன்றாய் நடத்துகிறவராய் இருக்கிறார். “தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்.” (ஆதி 33:11).அனேக வேளைகளில், தேவனுடைய பிள்ளைகள், அவருடைய அன்புக்கு பாத்திரவான்களாய் நடந்து கொள்ளுகிறதில்லை. அப்படி அவர்கள் செயல்பட்டாலும், தேவன், அவர்களை நன்றாகவே நடத்துகிறவராய் இருக்கிறார். தேவன் தம் மக்களுடன் […]

Read More