“ஆகையால், விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.” கொலோ 3:5 நமக்கு நெருக்கமான பாவம், நம்முடைய இருதயத்தில், ஆக்கிரமித்து, குடிகொள்ளுமென்றால், கிருபையும், பரிசுத்தமும், முற்றிலுமாக கீழான நிலைக்கு தள்ளப்பட்டு, பலவீனப்பட்டு போகும். அதே சமயத்தில், உன்னுடைய நெருக்கமான பாவம், ஆவியின் பட்டயத்தினாலும், வல்லமையினாலும் கொல்லப்பட்டு, அகற்றப்படும்பொழுது, – கிருபையும், பரிசுத்தமும் அதிவிரைவில், மென்மேலும், வளரவும், வலுவடையவும் செய்யும். ஒரு மனிதன் விஷத்தை உண்ட பிறகு, அவன் விஷத்தை வாந்தி எடுக்கும் வரை எதுவும் அவனை வளரவிடாது. அவ்வண்ணமாகவே, பிரியமான பாவங்கள் ஆத்துமாவிற்கு விஷமாய் இருக்கிறது. – இவை வாந்தி எடுக்கப்பட்டு, வெளியேற்றப்படும் வரை, அதாவது, ஆழமான மனந்திரும்புதலாலும், கிறிஸ்துவின் இரத்தத்தில் விசுவாசம் வைக்கும் வரை – அந்த ஆத்துமா ஒருபோதும் கிருபையிலும் பரிசுத்தத்திலும் செழிக்காது! நீங்கள் உயர்ந்த பரிசுத்த நிலையை எட்டுவீர்களென்றால், உங்களிடத்தில் உள்ள, மிகவும் கொந்தளிக்கும் தீய விருப்பங்களையும், […]
Read More