Post Tagged as ‘Pastor’s Blog’

உன்னை நீயே கேட்டுக்கொள், “நான் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நபராய் இருக்கிறேனா? – சார்ல்ஸ் சிமியோன். Ask yourselves, “Am I this blessed person?” – Charles Simeon.

  • By adming
  • Comments Off on உன்னை நீயே கேட்டுக்கொள், “நான் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நபராய் இருக்கிறேனா? – சார்ல்ஸ் சிமியோன். Ask yourselves, “Am I this blessed person?” – Charles Simeon.
  • June 30, 2024

உன்னை  நீயே கேட்டுக்கொள், “நான் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த நபராய் இருக்கிறேனா? “தன் நேசர்மேல் சார்ந்துக்கொண்டு, வனாந்திரத்திலிருந்து வருகிற இவள் யார்?” (உன்னதப்பாட்டு 8:5). உன்னை  நீயே கேட்டுக்கொள், “நான் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த நபராய் இருக்கிறேனா?” என்னுடைய பரிசுத்த நடக்கையை குறித்தும், ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள என்னுடைய முழுமையான பக்தியை குறித்தும் மற்றவர்கள் பார்க்கிறவன்னமாக, இந்த உலகத்தில் வாழ்கிறேனா? நான், உலகத்தை நேசிப்பதற்குப் பதிலாக, அதை மந்தமான வனாந்தரமாகக் கருதுகிறேனா? இந்தப் பொல்லாத உலகத்தின் ஆடம்பரங்களையும் மாயைகளையும், மாம்சத்தின் பாவ இச்சைகளையும் நான் கைவிடுகிறேனா? நான் இந்த உலகத்திற்கும், அதின் ஆசை இச்சைகளுக்கும், அதின் பழக்கவழக்கங்களுக்கும், அதின் நட்புக்கும் மரித்தவனாய் இருக்கிறேனா? நான் “அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேனா?  அதினால், மரணத்தின் கொடூரமான வலியில் இருந்த மனிதனை மதிக்காமல் இருப்பேனோ? (கலா 6:14) இந்த வனாந்தர உலகத்தின் வழியாக நான் கடந்து செல்லும்போது, “கர்த்தரிடத்தில் […]

Read More

The Christian’s never-failing resort. – C.H.Spurgeon. கிறிஸ்தவனின் ஒருபோதும் தோல்வியடையாத புகலிடம். – சி.எச்.ஸ்பர்ஜன்.

  • By adming
  • Comments Off on The Christian’s never-failing resort. – C.H.Spurgeon. கிறிஸ்தவனின் ஒருபோதும் தோல்வியடையாத புகலிடம். – சி.எச்.ஸ்பர்ஜன்.
  • May 31, 2024

“நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியபடுத்துங்கள்.” பிலி 4:6 ஜெபம், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒவ்வொரு இக்கட்டான நிலையிலும் கிறிஸ்தவர்களின் ஒருபோதும் தோல்வியடையாத புகலிடமாய் இருக்கிறது. உங்களது வாளை பயன்படுத்த முடியாதபோது, ஜெபம் என்கிற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளலாம். உங்கள் துப்பாகித்தூள் ஈரமாக இருக்கலாம், உங்களுடைய வில் நாண் உடைந்திருக்கலாம், ஆனால், ஜெபம் என்கிற ஆயுதமானது, எடுத்து பயன்படுத்த, எப்பொழுதும் ஆயத்தமாகவே இருக்கிறது.  லிவியாதான் என்னும் சத்துருவானவன், ஈட்டியை பார்த்து சிரிக்கலாம், அதேவேளையில், ஜெபத்தை கண்டு நடுங்குகிறவனாய் இருக்கிறான். வாளும், ஈட்டியும், துருபிடிக்காத வண்ணம், அதற்கு புதுபித்தல் அவசியம். ஆனால், ஜெபம், ஒருபோதும் துருபிடிக்காது. நாம் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. அது சிறந்ததையே செய்கிறது. ஜெபமானது, யாராலும் மூடமுடியாத திறந்த கதவு. பிசாசுகள், உங்களை எல்லா பக்கங்களிலும் சூழ்ந்திருக்கலாம் – ஆனால் மேல்நோக்கி செல்லும் பாதை எப்போதும் திறந்தே இருக்கும், […]

Read More

தேவனே, இந்த பாவத்தை அடித்து நொறுக்கும்! – தொமஸ் வாட்சன். Lord, smite this sin! – Thomas Watson.

  • By adming
  • Comments Off on தேவனே, இந்த பாவத்தை அடித்து நொறுக்கும்! – தொமஸ் வாட்சன். Lord, smite this sin! – Thomas Watson.
  • April 30, 2024

“உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது. உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.” சங்கீதம் 119:140 நாம் தேவனுடைய வார்த்தையின் பரிசுத்தத்தை நேசிக்கிறோமா? தேவனுடைய வார்த்தையானது, பாவத்தை அடித்து நொறுக்கி, பரிசுத்தத்தில் முன்னேறவே போதிக்கப்படுகிறது. நாம், அதினுடைய ஆவிக்குரிய தன்மையையும், பரிசுத்த தன்மையையும் நேசிக்கிறோமா?  பிரசங்கத்தை கேட்கிற அநேகர் அதினுடைய சொல்லாற்றலையும், அழகையும்தான் ரசிக்கின்றனர். அவர்கள், ஒரு நிகழ்ச்சிக்காக வருவது போல (எசே 33:31,32) அல்லது தோட்டத்தில் உள்ள பூக்களை பறிப்பது போல வருகிறார்கள். ஆனால், அவர்கள், தங்களின் பாவ இச்சைகள் அடித்து நொறுக்கப்படவோ அல்லது தங்களின் இருதயம் சுத்திகரிக்கப்படுவதற்கு வருவதில்லை. இவர்கள் மதியீனமான ஸ்திரீயை போன்று இருக்கிறார்கள். ஆம், அவள், தன்னுடைய முகத்தை அலங்கரிக்கிறாள், ஆனால், அவளுடைய உடல் நலத்தையையோ புறக்கணிக்கிறாள். தேவனுடைய வார்த்தையின் உணர்த்துதலை நாம் நேசிக்கிறோமா? நம்முடைய பாவத்தை குறித்து கண்டித்து உணர்த்தும்படியான, நம்முடைய மனசாட்சியை கடிந்து கொள்ளும் தேவனுடைய வார்த்தையை நேசிக்கிறோமா? சில நேரங்களில், கடிந்து கொண்டு போதிக்கும்படியாக, […]

Read More

ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல் – தொமஸ் வாட்சன். One sin lived in! Thomas Watson (1620-1686)

  • By adming
  • Comments Off on ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல் – தொமஸ் வாட்சன். One sin lived in! Thomas Watson (1620-1686)
  • February 29, 2024

தெய்வ பக்தியுள்ள ஒரு மனுஷன், ஒரே ஒரு பாவத்தில் வாழும்படியான வாழ்க்கை எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். 1. ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், சாத்தான், இன்னும் உனக்கு எதிராக அனேக பாவங்களை கொண்டுவர வழிவகை அமைத்துவிடும். வேட்டையாடுபவன், ஒரே ஒரு இறக்கையை கொண்டு பறவையை பிடித்து வைத்துக்கொள்ள முடியும். அவ்வண்ணமாக, ஒரே ஒரு பாவத்தினால், பிசாசு, யூதாசை பிடித்து வைத்துக்கொண்டான். 2. ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், சரியான இருதயம் அல்ல. ஒரு எதிராளியை, தனது வீட்டில், மறைத்து வைப்பவன், அவனுடைய தலைவனுக்கு துரோகி. அதுபோல, ஒரு பாவத்தில், ஈடுபடுபவன், துரோகி, நயவஞ்சகன்! 3. ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், ஒரு சிறிய திருட்டுதான், இன்னும் பெரிய திருட்டுக்கு எப்படி வழிவகுக்குதோ, இன்னும் அனேக பாவங்களுக்குள்ளாக செல்ல வழிவகுக்கும். பாவங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தப்பட்டதாய் இருக்கிறது. ஆம், ஒரு பாவம்தான், இன்னும் அனேக பாவங்களை […]

Read More

பிசாசின் சோதனைகளினாலே தாக்கப்படுதல் – தொமஸ் வாட்சன். Buffeted by Satan’s temptations! – Thomas Watson

Why does God allow His people to be buffeted by Satan’s temptations? He does it for many wise and holy ends. ஏன் தேவன், தம்முடைய பிள்ளைகளின் வாழ்வில், பிசாசின் சோதனைகளினால் தாக்கப்பட அனுமதிக்கிறார் ? ஆம், அவர் பல ஞானமான மற்றும் பரிசுத்தமான நோக்கங்களுக்காக அதை செய்கிறார். தேவன், அவர்களுடைய அன்பை பரிசோதிக்க, தம்முடைய பிள்ளைகள் சோதிக்கப்பட அனுமதிக்கிறார். சோதனையை நாம் சந்திக்கும்படியான வேளையில், அச்சோதனையை விட்டு விலகி, அதற்கு புற முதுகு காட்டி செல்லும்போதுதான், நாம் தேவனிடத்தில் எவ்வளவாய் அன்பு காட்டுகிறோம் என்று பரிசோதிக்கப்படுகிறது. பிசாசு, பாம்பை போல், தந்திரமாய் வந்து, கவர்ச்சியாய் ஆப்பிள் பழத்தை காட்டினாலும், தேவன் மீது அன்பு கொண்டவன், அத்தடைபட்ட பழத்தை தொடமாட்டான். ஆம், பிசாசானவன், உலகத்தின் அனைத்து ராஜ்யத்தையும், அதின் மேன்மையையும், கிறிஸ்துவுக்கு அளித்த பொழுது, இயேசுவானவர், அதை புறம்தள்ளினதினால், அவருடைய அன்பு, தம் பிதாவினிடத்தில் […]

Read More

Untried, untrodden, and unknown as your future path… – Octavius Winslow.(1808-1878) அறியப்படாத, முயற்சி செய்யப்படாத, கடந்து செல்லாத, உங்களின் எதிர்கால பாதை… – ஆக்டவியஸ் வின்ஸ்லோ. (1808-1878)

“ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்” யோபு 23:10 அறியப்படாத, முயற்சி செய்யப்படாத, கடந்து செல்லாத, உங்களின் எதிர்கால பாதையானது, ஒவ்வொரு அடியும், என்றென்றும் மாறாத, நித்தியமான, உடன்படிக்கையின் தேவனாகிய கரத்தினால், வரைபடமாக்கப்பட்டதும், ஏற்பாடு செய்யப்பட்டதும், வழங்கப்பட்டதுமாய் இருக்கிறது. அவரே, நம்மை வழிநடத்துகிறவராயும், அவருடைய அன்பின் குமாரனுக்குள், நம்மை ஏற்றுக்கொண்டவராயும், ஆரம்பம் முதல் முடிவு வரை, அவர் நம்மை அறிந்திருக்கிறவராயும் இருக்கிறார். – இது அவருக்கு புதிதானதும் அல்ல, நிச்சயமற்றதும் அல்ல, மறைக்கப்பட்டதும் அல்ல. அவர் புத்திசாலித்தனமாகவும், தயவாயும், நம்முடைய எதிர்காலத்தை குறித்து அனைத்து காரியங்களை நம்மிடத்திலிருந்து மறைப்பதால் நாம் நன்றி சொல்லுகிறோம். எப்படி கடந்த கால நிகழ்வுகள் அனைத்தும் நமக்கு அறிந்ததோ, அப்படியே, எதிர்கால நிகழ்வுகள் அனைத்தும், அவர் தம் பார்வைக்கு, வெளிப்படையாகவும், காணக்கூடியதாகவும் உள்ளது. நம்முடைய மேய்ப்பனுக்கு, தம்முடைய மந்தையை, திறமையாகவும், மென்மையாகவும், பாதுகாப்பாகவும், பல வகையான பாதைகளின் வழியாய் வழி நடத்த அவருக்கு தெரியும். ஓ! […]

Read More

தேவனண்டை கிட்டி சேர உதவும் ஐந்து பெரிதான சிலாக்கியங்கள் – சி .எச். ஸ்பர்ஜன். Five Major merits that helps to draw near to God – C.H.Spurgeon.

ஆண்டவரை அறிந்த எனக்கு அருமையானவர்களே! அவரண்டை கிட்டி வரும்படி உங்களை வேண்டுகிறேன். தைரியத்துடன் அவரண்டை கிட்டி சேர சந்தோஷப்படுங்கள். மற்றவர்களுக்காக, ஜெபிக்கும்படியான ஜெபத்தில், இருக்கும் சிலாக்கியம், அவரிடத்திலிருந்து தூரமாய் அல்ல, அவருக்கு அருகில், நெருங்கி வருவதே ஆகும். ஆபிரகாம், அவ்விதமாகத்தான், அவரண்டை, நெருங்கி, சேர்ந்து, சோதோம், கொமொராவுக்காக கெஞ்சிப் பிராத்தித்தான். பரிசுத்த ஆவியான கடவுள் தாமே, அவரண்டை கிட்டி சேர, நமக்கு உதவி செய்வாராக. அவரண்டை கிட்டி சேருவதற்கு உதவியாக, பின்வரும், பெரிதான ஐந்து சிலாக்கியங்களை நாம் பார்க்கலாம். முதலாவது, நாம் உண்மையாகவே எவ்வளவு அவருக்கு அருகாமை உள்ளவர்கள். ஆம், இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால், நம்முடைய ஒவ்வொரு பாவத்திலிருந்து, கழுவப்பட்டவர்களாய் இருக்கிறோம். உச்சதலை முதல் உள்ளங்கால் மட்டும்,  இம்மானுவேலாகிய, அவருடைய நீதியினால், பாவமற, கழுவப்பட்டவர்களாய் உள்ளோம். நாம், அன்புக்குரிய அவருக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளோம்! ஆம், இந்த நேரத்தில் நாம் கிறிஸ்துவுடன் ஒன்றாகவும், அவருடைய சரீரத்தின் அங்கங்களாய் இருக்கிறோம். நாம் எப்படி அருகில் இருக்க […]

Read More

வேதம் மட்டுமே! – ஜே.சி.ரைல். Sola Scriptura! – J.C.Ryle.

—– Reformation Day Special —— ஜெபத்திற்கு அடுத்தபடியாக, நடைமுறை பக்திக்குரிய வாழ்விற்கு, வேத வாசிப்பு போன்ற முக்கியமானது எதுவும் இல்லை. வேதத்தை வாசிப்பதினால், நாம் எதை விசுவாசிப்பது, எப்படியாக இருப்பது, எதை செய்வது, நிம்மதியாக வாழ்வது எப்படி, நிம்மதியாக மரிப்பது எப்படி, என்பதை கற்றுக்கொள்ளலாம். வேதம் மட்டுமே, “கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்குகிறது.” (2 தீமோ 3:15). வேதம் மட்டுமே, பரலோகத்திற்கு செல்லும் வழியை காட்டுகிறது, நீ அறிய வேண்டிய யாவற்றையும் கற்பிக்கிறது. நீ விசுவாசிக்க வேண்டிய அனைத்தையும் சுட்டிக்காட்டுகிறது, மேலும், நீ செய்ய வேண்டிய அனைத்தையும் விளக்கி காட்டுகிறது. வேதம் மட்டுமே, நீ ஒரு பாவி என்றும், கடவுள் முற்றிலும் பரிசுத்தமானவராகவும், மன்னிப்பு, சமாதானம், கிருபையை (இயேசு கிறிஸ்து) பெரிதான விதத்தில் அளிக்கிறவராக காட்ட முடியும். வேதத்தை கொண்டு, பரிசுத்த ஆவியானவர், இருதயத்தை ஆழமாய் சந்திக்கும் பொழுது, ஆத்துமாக்கள், தேவன் பக்கமாக மனந்திரும்புகிறார்கள். இவ்வண்ணமாகவே, வேதமானது, […]

Read More

பாடுகளின் வேளையில், உண்மையுள்ள ஆத்துமா பெறும் பலன்கள் – ஜோன் ப்ளவேல். What advantages sincerity gives in suffering times? – Puritan John Flavel.

1. முதலாவது, உண்மையான பக்தி, உலக சிநேகத்திற்கு இடம் கொடுக்காது. பாடுகளின் வேளையில், உலக சிநேகம், கிறிஸ்துவை விட்டு பின்வாங்கும்படியாக செய்யும். நான் மறுக்கவில்லை, இன்றைக்கு, விசுவாசிகள், உலகத்தை சார்ந்து வாழ்ந்தாலும், அதுவே, அவர்களுக்கு பிரதானமாக இல்லை. “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.” (1 யோவான் 2:15). ஒரு கிறிஸ்தவன், எவ்வளவாய் உலகத்தின் மீது அன்பு கூறினாலும், அது தேவன் மீது கொண்டுள்ள அன்புக்கு மேலாக இருக்காது. நிழலுக்கு அடியில் வாழும் வளர்ச்சியற்று, குன்றிப்போய் கிடக்கும் செடியை போல், அவன் பாதிப்படைய மாட்டான். எவன் ஒருவன், உலகத்தை, அதிகமாய் அன்பு கூறுகிறானோ, அவன், சோதனையை சந்திக்கிற வேளையில், கிறிஸ்துவை விட்டு விலகுகிறவனாய் இருக்கிறான். இதுவே, மத்தேயு 19:22 ல் நாம் பார்க்கும் வாலிபனின் நிலைமை. “அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.” இதுவே, 2 தீமோத்தேயு 4:10 ல் […]

Read More

இரட்சிப்பை மிகவும் பெரியதாக மாற்றுவது எது?-மார்டின் லாய்ட் ஜோன்ஸ். What Makes Salvation So Great – Martyn Lloyd Jones.

இன்னும் அற்புதமானது வேறு எங்கே இருக்கிறது? இந்த நவீன உலகத்தில், இந்த “மிகப்பெரிய இரட்சிப்பு” போன்ற அற்புதமானது வேறு எதுவும் இல்லை. (எபி 2:3) பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்ற அறிவுக்கு ஒப்பிடத்தக்கது எதுவாக இருக்கும்? இன்று இரவில் நான் இறந்தாலும் பரவாயில்லை என்று தெரிந்தும், நிம்மதியாக படுத்து உறங்குவதை விட அற்புதம் வேறு எதுவாக இருக்கும்? நான் கடவுளுடைய கோபாக்கினையிளிருந்து தப்பிக்கப்பட்டு, நித்தியமான வாழ்வை பெற்ற நிச்சயத்தை உடையவனாய் இருக்கிறபடியால், நான் இன்றைக்கு இறந்தாலும், அடுத்த நொடி பொழுதில், அவருடைய பிள்ளையாக, பரலோகத்தில் விழித்துக்கொள்கிறவனாய் இருப்பேன் என்ற ஆழமான நிச்சயத்தை பெற்ற அற்புதத்தை காட்டிலும் வேறு எதுவாக இருக்கும்? ஓ, கிறிஸ்துவின் ஐக்கியம் எவ்வளவு அற்புதமானது. ஆனால், இன்னும் அற்புதமான ஒன்று இருக்கிறது – அதுதான் வரவிருக்கும் உலகம். இந்த உலகம் அழிவதற்குகேதுவான உலகம். இது ஒரு பாவம் நிறைந்த உலகம். இப்படிப்பட்ட உலகத்தை மேம்படுத்த, புதிய ஏற்பாடு எதுவும் சொல்லவில்லை. […]

Read More