தெய்வ பக்தியுள்ள ஒரு மனுஷன், ஒரே ஒரு பாவத்தில் வாழும்படியான வாழ்க்கை எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். 1. ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், சாத்தான், இன்னும் உனக்கு எதிராக அனேக பாவங்களை கொண்டுவர வழிவகை அமைத்துவிடும். வேட்டையாடுபவன், ஒரே ஒரு இறக்கையை கொண்டு பறவையை பிடித்து வைத்துக்கொள்ள முடியும். அவ்வண்ணமாக, ஒரே ஒரு பாவத்தினால், பிசாசு, யூதாசை பிடித்து வைத்துக்கொண்டான். 2. ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், சரியான இருதயம் அல்ல. ஒரு எதிராளியை, தனது வீட்டில், மறைத்து வைப்பவன், அவனுடைய தலைவனுக்கு துரோகி. அதுபோல, ஒரு பாவத்தில், ஈடுபடுபவன், துரோகி, நயவஞ்சகன்! 3. ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், ஒரு சிறிய திருட்டுதான், இன்னும் பெரிய திருட்டுக்கு எப்படி வழிவகுக்குதோ, இன்னும் அனேக பாவங்களுக்குள்ளாக செல்ல வழிவகுக்கும். பாவங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தப்பட்டதாய் இருக்கிறது. ஆம், ஒரு பாவம்தான், இன்னும் அனேக பாவங்களை […]
Read More