Post Tagged as ‘Pastor’s Blog’

The best means to mortify sin! – Thomas Brooks (1608-1680).பாவத்தை அழிக்க சிறந்த வழிகள் – தொமஸ் ப்ரூக்ஸ் (1608-1680).

  • By adming
  • Comments Off on The best means to mortify sin! – Thomas Brooks (1608-1680).பாவத்தை அழிக்க சிறந்த வழிகள் – தொமஸ் ப்ரூக்ஸ் (1608-1680).
  • January 30, 2025

“ஆகையால், விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.” கொலோ 3:5 நமக்கு நெருக்கமான பாவம், நம்முடைய இருதயத்தில், ஆக்கிரமித்து, குடிகொள்ளுமென்றால், கிருபையும், பரிசுத்தமும், முற்றிலுமாக கீழான நிலைக்கு தள்ளப்பட்டு, பலவீனப்பட்டு போகும். அதே சமயத்தில், உன்னுடைய நெருக்கமான பாவம், ஆவியின் பட்டயத்தினாலும், வல்லமையினாலும் கொல்லப்பட்டு, அகற்றப்படும்பொழுது, – கிருபையும், பரிசுத்தமும் அதிவிரைவில், மென்மேலும், வளரவும், வலுவடையவும் செய்யும்.   ஒரு மனிதன் விஷத்தை உண்ட பிறகு, அவன் விஷத்தை வாந்தி எடுக்கும் வரை எதுவும் அவனை வளரவிடாது. அவ்வண்ணமாகவே, பிரியமான பாவங்கள் ஆத்துமாவிற்கு விஷமாய் இருக்கிறது. – இவை வாந்தி எடுக்கப்பட்டு, வெளியேற்றப்படும் வரை, அதாவது, ஆழமான மனந்திரும்புதலாலும், கிறிஸ்துவின் இரத்தத்தில் விசுவாசம் வைக்கும் வரை – அந்த ஆத்துமா ஒருபோதும் கிருபையிலும் பரிசுத்தத்திலும் செழிக்காது! நீங்கள் உயர்ந்த பரிசுத்த நிலையை எட்டுவீர்களென்றால், உங்களிடத்தில் உள்ள, மிகவும் கொந்தளிக்கும் தீய விருப்பங்களையும், […]

Read More

வேதத்தின் அதிகாரம் – பாஸ்டர். ஜான்நெல்சன் The Authority of Scripture – Pastor. John Nelson

  • By adming
  • Comments Off on வேதத்தின் அதிகாரம் – பாஸ்டர். ஜான்நெல்சன் The Authority of Scripture – Pastor. John Nelson
  • November 27, 2024

வேதத்தைப் பற்றி சிலரிடம் “மிகையான” எண்ணமும், சிலரிடம் “குறையான” எண்ணமும் உள்ளது என்பது ஆச்சரியமாய் இருக்கிறதா? ஆனால் இதுதான் உண்மை.எப்படி? 1980ம் ஆண்டுகளில் பைபிள் மேல் ஒரு பொருளை வைத்து அடி வாங்கினவர்கள் உண்டு. (இப்போது மொபைல் பைபிள் காலத்தில் இந்த தண்டனைக்கு இடமில்லையே!). ஆனால், இன்று எந்த மொழிபெயர்ப்பு “படிக்க எளிமையானது” என்று விவாதிக்கும் நிலைமை உள்ளது. மேலோட்டமாக பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் வேதத்தை நேசிப்பது போல இருந்தாலும், அறிந்தோ அறியாமலோ கடவுளுடைய வார்த்தையின் அதிகாரம் இவர்களால் மட்டுப்படுத்தப்பட்டது கசப்பு கலந்த உண்மையாகும். இங்கு தொழில்நுட்ப வேதாகமத்தை பயன்படுத்துவது பற்றி நாம் பேசவில்லை. இப்படிப்பட்ட மேலோட்டமான காரியங்களை தவிர்த்து கடவுளுடைய வார்த்தை எப்படிப்பட்ட அதிகாரம் உள்ளது? என்பது பற்றி வேதத்தின் அடிப்படையில் சிந்திப்பதே இந்த பாடத்தின் நோக்கம். “அதிகாரம்” என்ற வார்த்தையை “தோற்றம்” அல்லது “விளைவை ஏற்படுத்தக்கூடிய ஆரம்பம்” என்று மூல பாஷையின் மூலம் பொருள் கொள்ளலாம். ஒருவருடைய […]

Read More

வேதபூர்வமான பரிசுத்தம் – ஜே.சி.ரைல். Biblical Holiness. – J.C.Ryle.

  • By adming
  • Comments Off on வேதபூர்வமான பரிசுத்தம் – ஜே.சி.ரைல். Biblical Holiness. – J.C.Ryle.
  • September 29, 2024

‘பரிசுத்தமில்லாமல், ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லை!’ (எபி 12:14) நாம் பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்கிறோமா? நாம் கர்த்தரை தரிசிப்போமா? இந்த அவசரமான, பரபரப்பான உலகில் – சில நிமிடங்கள் அமைதியாக, பரிசுத்தத்ததை குறித்து சற்று சிந்தித்துப்பார்ப்போம். “பரிசுத்தமில்லாமல், ஒருவனும் கர்த்தரைக் காணமாட்டான்!” ஒரு மனிதன் மதம், பக்தி என்ற விஷயத்தில் மிகுந்த வைராக்கியமாக இருக்கலாம் – இருந்தாலும், அவன்  உண்மையான பரிசுத்தத்தை அடைய முடியாது. உண்மையான நடைமுறைக்கேதுவான பரிசுத்தம் எது? அது அறிவு சார்ந்தது அல்ல – பிலேயாம் அதை பெற்றிருந்தான். அது பெரிய பதவியை கொண்டது அல்ல – யூதாஸ் காரியோத்து அதை பெற்றிருந்தான். அது, பெரிய, பல காரியங்களை செய்கிறது அல்ல – ஏரோது அதை கொண்டிருந்தான். அது, வெறும் பக்தியில் கொண்டிருக்கிற வைராக்கியம் அல்ல – யெகூ அதை கொண்டிருந்தான். அது, வெறும் வெளிப்புற நடத்தை மற்றும் ஒழுக்கத்தை குறித்து அல்ல – பணக்கார வாலிபன் அதை கொண்டிருந்தான். அது, […]

Read More

Why does God allow sin to remain in His people? – Thomas Boston (1676-1732).ஏன் தேவன் தம்முடைய பிள்ளைகளிடத்தில் பாவம் இருக்கும்படியாக அனுமதிக்கிறார்? – தொமஸ் பாஸ்டன் (1676-1732).

  • By adming
  • Comments Off on Why does God allow sin to remain in His people? – Thomas Boston (1676-1732).ஏன் தேவன் தம்முடைய பிள்ளைகளிடத்தில் பாவம் இருக்கும்படியாக அனுமதிக்கிறார்? – தொமஸ் பாஸ்டன் (1676-1732).
  • August 29, 2024

நான் ஏன் அதே பாவ சிந்தனைகளோடு போராட வேண்டியிருக்கிறது? பெருமை, மற்றும் பாவ இச்சைகளை வெற்றி கொள்ள ஏன் என்னால் முடியவில்லை? ஏன் தேவன் தம்முடைய பிள்ளைகளிடத்தில் எஞ்சிய பாவம் தங்க அனுமதிக்கிறார்? இவ்விதமான கேள்விகள், கிறிஸ்தவர்கள் அவ்வப்பொழுது கேட்பது உண்டு. ஓ! இவ்விதமான பாவ எண்ணங்கள், வார்த்தைகள், மற்றும் செய்கைகளோடு போராட்டம் இல்லையென்றால், எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நாம் நினைப்பது உண்டு. ஆனால், தேவன், தம்முடைய இறையாண்மையின் கீழாக, அவர், ஒரு நோக்கத்தோடு, தம்முடைய பிள்ளைகளிடத்தில், எஞ்சிய பாவம் தங்க அனுமதிக்கிறார். 1. தேவன், விசுவாசிகளின் பரிசுத்தமாகுதலை ஏற்படுத்தியிருக்கிறார். அதாவது, அவர்கள் எப்பொழுதும் தங்களை தாழ்மைக்குள்ளாக, வைத்துக்கொள்வதற்கு, இவ்வுலகத்தில் இருக்கும்பொழுது, அவர்களுக்குள், பாவமானது, எந்நேரமும், செயலில் இருக்கும்படியாக, விட்டுவிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கர்த்தர், பவுலுடைய வாழ்வில், தாழ்மைக்குள்ளாக இருக்கும்படியாக, அவனுடைய மாம்சத்தில் ஒரு முள்ளை கொடுத்தார். நாம், தாவீதை குறித்து அறிந்துகொள்ளும் பொழுது, அவன், தன்னுடைய, கொடிய வீழ்ச்சிக்குப்பிறகு, தாழ்மையின் […]

Read More

This incomparable book! – Thomas Brooks. (1608-1680) இதுவே ஒப்பிடப்படமுடியாத புத்தகம்! – தொமஸ் ப்ரூக்ஸ். (1608-1680)

  • By adming
  • Comments Off on This incomparable book! – Thomas Brooks. (1608-1680) இதுவே ஒப்பிடப்படமுடியாத புத்தகம்! – தொமஸ் ப்ரூக்ஸ். (1608-1680)
  • July 30, 2024

முழு வேதாகமம் ஒன்றே. அதுவே தன்னுடைய பிரியமான மணவாட்டிக்கு கொடுக்கப்பட்ட கிறிஸ்து இயேசுவின் அன்பு மடல். ஓ! விலையேறப்பெற்ற, மகத்துவமான, மகா உன்னதமான அனைத்தும் இந்த ஒப்பிடப்பட முடியாத புத்தகத்தில் உள்ளது. இந்த புத்தகத்தை போல, வேறு எந்த புத்தகமும், உன்னை சந்தோஷமுள்ளவனாக்கி, நித்தமும், உன்னை சந்தோஷப்படுத்தும் உபயோகரமான, தேவையான, மகிழ்ச்சியான, அவசியமான புத்தகம் வேறு எதுவும் இல்லை. ஆ, கர்த்தருடைய வார்த்தை, உன்னை நடத்துவதற்கு, வெளிச்சமாயும், உனக்கு புத்தி சொல்ல  ஆலோசகராகவும், உன்னை ஆறுதல்படுத்த, ஆறுதல் அளிக்கிறவராயும், உன்னை தாங்குவதற்கு ஊன்றுகோளாயும், உன்னை பாதுகாக்க, பட்டயமாயும், உன்னை குணப்படுத்த, மருத்துவராயும் இருக்கிறது. வேத புத்தகமானது, உன்னை வளப்படுத்த சுரங்கமாயும், உன்னை அணிவிக்க ஆடையாயும், உன்னை முடிசூட்ட ஒரு கிரீடமாயும், உன்னை பலப்படுத்த உனக்கு வேண்டிய ஆகாரமாயும், உன்னை உற்சாகப்படுத்த திராட்சை ரசமாயும், உனக்கு விருந்தாக அமைய, ஒரு தேன்கூடாயும், உன்னை மகிழ்விக்க ஒரு இசையாயும், உன்னை சந்தோஷப்படுத்த, அது உனக்கு […]

Read More

உன்னை நீயே கேட்டுக்கொள், “நான் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நபராய் இருக்கிறேனா? – சார்ல்ஸ் சிமியோன். Ask yourselves, “Am I this blessed person?” – Charles Simeon.

  • By adming
  • Comments Off on உன்னை நீயே கேட்டுக்கொள், “நான் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நபராய் இருக்கிறேனா? – சார்ல்ஸ் சிமியோன். Ask yourselves, “Am I this blessed person?” – Charles Simeon.
  • June 30, 2024

உன்னை  நீயே கேட்டுக்கொள், “நான் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த நபராய் இருக்கிறேனா? “தன் நேசர்மேல் சார்ந்துக்கொண்டு, வனாந்திரத்திலிருந்து வருகிற இவள் யார்?” (உன்னதப்பாட்டு 8:5). உன்னை  நீயே கேட்டுக்கொள், “நான் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த நபராய் இருக்கிறேனா?” என்னுடைய பரிசுத்த நடக்கையை குறித்தும், ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள என்னுடைய முழுமையான பக்தியை குறித்தும் மற்றவர்கள் பார்க்கிறவன்னமாக, இந்த உலகத்தில் வாழ்கிறேனா? நான், உலகத்தை நேசிப்பதற்குப் பதிலாக, அதை மந்தமான வனாந்தரமாகக் கருதுகிறேனா? இந்தப் பொல்லாத உலகத்தின் ஆடம்பரங்களையும் மாயைகளையும், மாம்சத்தின் பாவ இச்சைகளையும் நான் கைவிடுகிறேனா? நான் இந்த உலகத்திற்கும், அதின் ஆசை இச்சைகளுக்கும், அதின் பழக்கவழக்கங்களுக்கும், அதின் நட்புக்கும் மரித்தவனாய் இருக்கிறேனா? நான் “அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேனா?  அதினால், மரணத்தின் கொடூரமான வலியில் இருந்த மனிதனை மதிக்காமல் இருப்பேனோ? (கலா 6:14) இந்த வனாந்தர உலகத்தின் வழியாக நான் கடந்து செல்லும்போது, “கர்த்தரிடத்தில் […]

Read More

The Christian’s never-failing resort. – C.H.Spurgeon. கிறிஸ்தவனின் ஒருபோதும் தோல்வியடையாத புகலிடம். – சி.எச்.ஸ்பர்ஜன்.

  • By adming
  • Comments Off on The Christian’s never-failing resort. – C.H.Spurgeon. கிறிஸ்தவனின் ஒருபோதும் தோல்வியடையாத புகலிடம். – சி.எச்.ஸ்பர்ஜன்.
  • May 31, 2024

“நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியபடுத்துங்கள்.” பிலி 4:6 ஜெபம், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒவ்வொரு இக்கட்டான நிலையிலும் கிறிஸ்தவர்களின் ஒருபோதும் தோல்வியடையாத புகலிடமாய் இருக்கிறது. உங்களது வாளை பயன்படுத்த முடியாதபோது, ஜெபம் என்கிற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளலாம். உங்கள் துப்பாகித்தூள் ஈரமாக இருக்கலாம், உங்களுடைய வில் நாண் உடைந்திருக்கலாம், ஆனால், ஜெபம் என்கிற ஆயுதமானது, எடுத்து பயன்படுத்த, எப்பொழுதும் ஆயத்தமாகவே இருக்கிறது.  லிவியாதான் என்னும் சத்துருவானவன், ஈட்டியை பார்த்து சிரிக்கலாம், அதேவேளையில், ஜெபத்தை கண்டு நடுங்குகிறவனாய் இருக்கிறான். வாளும், ஈட்டியும், துருபிடிக்காத வண்ணம், அதற்கு புதுபித்தல் அவசியம். ஆனால், ஜெபம், ஒருபோதும் துருபிடிக்காது. நாம் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. அது சிறந்ததையே செய்கிறது. ஜெபமானது, யாராலும் மூடமுடியாத திறந்த கதவு. பிசாசுகள், உங்களை எல்லா பக்கங்களிலும் சூழ்ந்திருக்கலாம் – ஆனால் மேல்நோக்கி செல்லும் பாதை எப்போதும் திறந்தே இருக்கும், […]

Read More

தேவனே, இந்த பாவத்தை அடித்து நொறுக்கும்! – தொமஸ் வாட்சன். Lord, smite this sin! – Thomas Watson.

  • By adming
  • Comments Off on தேவனே, இந்த பாவத்தை அடித்து நொறுக்கும்! – தொமஸ் வாட்சன். Lord, smite this sin! – Thomas Watson.
  • April 30, 2024

“உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது. உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.” சங்கீதம் 119:140 நாம் தேவனுடைய வார்த்தையின் பரிசுத்தத்தை நேசிக்கிறோமா? தேவனுடைய வார்த்தையானது, பாவத்தை அடித்து நொறுக்கி, பரிசுத்தத்தில் முன்னேறவே போதிக்கப்படுகிறது. நாம், அதினுடைய ஆவிக்குரிய தன்மையையும், பரிசுத்த தன்மையையும் நேசிக்கிறோமா?  பிரசங்கத்தை கேட்கிற அநேகர் அதினுடைய சொல்லாற்றலையும், அழகையும்தான் ரசிக்கின்றனர். அவர்கள், ஒரு நிகழ்ச்சிக்காக வருவது போல (எசே 33:31,32) அல்லது தோட்டத்தில் உள்ள பூக்களை பறிப்பது போல வருகிறார்கள். ஆனால், அவர்கள், தங்களின் பாவ இச்சைகள் அடித்து நொறுக்கப்படவோ அல்லது தங்களின் இருதயம் சுத்திகரிக்கப்படுவதற்கு வருவதில்லை. இவர்கள் மதியீனமான ஸ்திரீயை போன்று இருக்கிறார்கள். ஆம், அவள், தன்னுடைய முகத்தை அலங்கரிக்கிறாள், ஆனால், அவளுடைய உடல் நலத்தையையோ புறக்கணிக்கிறாள். தேவனுடைய வார்த்தையின் உணர்த்துதலை நாம் நேசிக்கிறோமா? நம்முடைய பாவத்தை குறித்து கண்டித்து உணர்த்தும்படியான, நம்முடைய மனசாட்சியை கடிந்து கொள்ளும் தேவனுடைய வார்த்தையை நேசிக்கிறோமா? சில நேரங்களில், கடிந்து கொண்டு போதிக்கும்படியாக, […]

Read More

ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல் – தொமஸ் வாட்சன். One sin lived in! Thomas Watson (1620-1686)

  • By adming
  • Comments Off on ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல் – தொமஸ் வாட்சன். One sin lived in! Thomas Watson (1620-1686)
  • February 29, 2024

தெய்வ பக்தியுள்ள ஒரு மனுஷன், ஒரே ஒரு பாவத்தில் வாழும்படியான வாழ்க்கை எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். 1. ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், சாத்தான், இன்னும் உனக்கு எதிராக அனேக பாவங்களை கொண்டுவர வழிவகை அமைத்துவிடும். வேட்டையாடுபவன், ஒரே ஒரு இறக்கையை கொண்டு பறவையை பிடித்து வைத்துக்கொள்ள முடியும். அவ்வண்ணமாக, ஒரே ஒரு பாவத்தினால், பிசாசு, யூதாசை பிடித்து வைத்துக்கொண்டான். 2. ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், சரியான இருதயம் அல்ல. ஒரு எதிராளியை, தனது வீட்டில், மறைத்து வைப்பவன், அவனுடைய தலைவனுக்கு துரோகி. அதுபோல, ஒரு பாவத்தில், ஈடுபடுபவன், துரோகி, நயவஞ்சகன்! 3. ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், ஒரு சிறிய திருட்டுதான், இன்னும் பெரிய திருட்டுக்கு எப்படி வழிவகுக்குதோ, இன்னும் அனேக பாவங்களுக்குள்ளாக செல்ல வழிவகுக்கும். பாவங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தப்பட்டதாய் இருக்கிறது. ஆம், ஒரு பாவம்தான், இன்னும் அனேக பாவங்களை […]

Read More

பிசாசின் சோதனைகளினாலே தாக்கப்படுதல் – தொமஸ் வாட்சன். Buffeted by Satan’s temptations! – Thomas Watson

Why does God allow His people to be buffeted by Satan’s temptations? He does it for many wise and holy ends. ஏன் தேவன், தம்முடைய பிள்ளைகளின் வாழ்வில், பிசாசின் சோதனைகளினால் தாக்கப்பட அனுமதிக்கிறார் ? ஆம், அவர் பல ஞானமான மற்றும் பரிசுத்தமான நோக்கங்களுக்காக அதை செய்கிறார். தேவன், அவர்களுடைய அன்பை பரிசோதிக்க, தம்முடைய பிள்ளைகள் சோதிக்கப்பட அனுமதிக்கிறார். சோதனையை நாம் சந்திக்கும்படியான வேளையில், அச்சோதனையை விட்டு விலகி, அதற்கு புற முதுகு காட்டி செல்லும்போதுதான், நாம் தேவனிடத்தில் எவ்வளவாய் அன்பு காட்டுகிறோம் என்று பரிசோதிக்கப்படுகிறது. பிசாசு, பாம்பை போல், தந்திரமாய் வந்து, கவர்ச்சியாய் ஆப்பிள் பழத்தை காட்டினாலும், தேவன் மீது அன்பு கொண்டவன், அத்தடைபட்ட பழத்தை தொடமாட்டான். ஆம், பிசாசானவன், உலகத்தின் அனைத்து ராஜ்யத்தையும், அதின் மேன்மையையும், கிறிஸ்துவுக்கு அளித்த பொழுது, இயேசுவானவர், அதை புறம்தள்ளினதினால், அவருடைய அன்பு, தம் பிதாவினிடத்தில் […]

Read More