Post Tagged as ‘Pastor’s Blog’

தாழ்மையில்லாத இடத்தில், உண்மையான ஆசீர்வாதம் இல்லை. – Dr. பீட்டர் மாஸ்டர்ஸ்.

NO HUMILITY, NO REAL BLESSING – Dr. Peter Masters “அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்;பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.” (1 பேதுரு 5:5). தாழ்மையானது, நம் சபைக்கும், நம்முடைய தனிப்பட்ட வாழ்விற்கும் மிகவும் அவசியமான ஒன்று. நாம், தாழ்மையில் குறைவுபடும்பொழுது, தேவனே நமக்கு எதிராக இருக்கிறார். (தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்.) கிரேக்க பதத்தில் பார்க்கும்போது, ஒரு இராணுவ தளபதி தன்னுடைய எதிராளிக்கு எதிராக படையெடுத்து நிற்கும் நிலையை காட்டுகிறது. ஒரு இரட்சிக்கப்படாத மனிதனுடைய வாழ்க்கையில், அவன் பெருமைகொண்டதற்கான, தேவனுடைய நியாயத்தீர்ப்பு, அவன் வாழ்நாளின் கடைசிக்கு ஒத்திப்போடபட்டிருக்கலாம். ஆனால், ஒரு விசுவாசிக்கோ, அவன், தன் தாழ்மையில் குறைவுபடுவதை, தேவன் காணும்போது, அவர் அதிகமாய் பாதிக்கப்பட்டு, அவனுக்கு எதிராக செயல்படுகிறார்.நாம் நம்மைநாமே உயர்த்திக்கொள்ளுகிற எந்த முயற்சியும், அதாவது  நாம் எடுக்கிற ஒவ்வொரு முயற்சியும், மற்றவர்களால் கவனிக்கப்பட வேண்டும், பாராட்டப்பட […]

Read More

உன்னுடைய விசுவாசத்தை வளர்ப்பதற்குண்டான வழிமுறைகள். — ஜார்ஜ் முல்லர்.

Guidelines To Build Your Faith – George Muller. 1.  தேவனுடைய வார்த்தையை கவனமாய் படித்து, அதை தியானம் பண்ணுங்கள். தேவனுடைய வார்த்தையை படிப்பதின் மூலம், விசேஷமாக அதை தியானிப்பதின் மூலம், விசுவாசியானவன், தேவனுடைய குணாதிசயத்தையும், அவருடைய சுபாவத்தையும் மேலும் அறிந்து, அவற்றோடு ஒன்றிப்போகிறான். தேவனுடைய நீதி மற்றும் பரிசுத்தத்திற்கு அடுத்தபடியாக,  அவர் எவ்வளவு அன்புள்ளவர், இரக்கமுள்ளவர், தயையுள்ளவர், ஞானமுள்ளவர், உண்மையுள்ள பிதாவாய் இருக்கிறார் என்று உணர்ந்து கொள்ளுகிறான். ஆகையால், பல்வேறு பாடுகள், இழப்புக்கள், பொருளாதார தேவைகள் மத்தியில் செல்லும் போதும், அவன், அவனுக்கு உதவி செய்யும் தேவனுடைய செயலாற்றும் தன்மையில் இளைப்பாறுகிறவனாய் இருக்கிறான். தேவன், வல்லமையில், சர்வ வல்லவராய் இருக்கிறார் என்றும், ஞானத்தில் முடிவற்றவராய் இருக்கிறார் என்றும், அவர் தம்முடைய மக்களை, விடுவிக்கவும், உதவி செய்யவும் ஆயத்தமாய் இருக்கிறார் என்றும் அவன் தேவனுடைய வார்த்தையில் கற்றுக்கொள்ளுகிறவனாய் இருக்கிறான். தேவனுடைய வார்த்தையை படித்து, அதை தியானம் செய்வது விசுவாசத்தை உறுதிபடுத்துவதற்குண்டான […]

Read More

தெய்வ பயத்தைகுறித்ததான ஆறு கேள்விகள் || 6 Questions about the Fear of God.

— Dr. மைக்கேல் ரீவ்ஸ் கேள்வி 1: பயம் நல்லதா? அல்லது கெட்டதா? அனேக இடங்களில் வேதமானது, பயம் ஒரு தவறானதும், அதிலிருந்து கிறிஸ்துவானவர் நம்மை விடுதலை பண்ண வந்திருக்கிறார் என்பதை தெளிவாக காண்பிக்கிறது. அப்.யோவான் இவ்விதமாக கூறுகிறார், “அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது. பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.” ஒரு பக்கம், கிறிஸ்துவானவர், பயத்திலிருந்து நம்மை விடுதலை பண்ணுகிறார் என்றும் மறுபக்கம் நாம் கடவுளுக்கு மட்டும் பயப்பட வேண்டும் என்று கூறப்படுகிறோம். வேதத்தில், “தெய்வ பயமானது” பெரிய விஷயம்  ஒன்றுமில்லை என்று நம்மை அதைரியப்படுத்துகிறதாககூட இருக்கலாம்.  ஏற்கனவே கவலைப்பட நிறைய இருக்கிறது, இதில வேற நாம் இன்னும் சேர்த்துக்கொள்ளனுமோ என்று தோன்றும். இப்படி கடவுளை  குறித்த பயத்தை தவறாக நினைத்து, சுவிசேஷத்தில் காணப்படும் அன்பும், கிருபையும் நிறைந்த கடவுளோடு ஒப்பிட அவசியமில்லை. சுவிசேஷம் ஒருபக்கம் நம்மை பயத்திலிருந்து விடுவிக்கிறது, மறுபக்கம் பயத்தை கொடுக்கிறது […]

Read More

நீங்கள் சபையில் சேர்ந்திருக்க வேண்டிய பத்து காரணங்கள் – பீட்டர் ஆடம் || Ten Reasons Why You Need to Belong to a Church – Peter Adam

“மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டு விடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.” (எபிரெயர் 10:24,25). 1. ஏனென்றால், கிறிஸ்தவ ஐக்கியத்தின் ஆதரவும், உற்சாகமும் தொடர்ச்சியாக உங்களுக்கு தேவைப்படுகிறது. கிறிஸ்தவ வாழ்வு என்பது தனித்து வாழும்படியான வாழ்க்கையாக வடிவமைக்கப்படவில்லை. அப்படியாக வாழ நினைப்பவர்கள், வீழ்ச்சியை சந்திப்பர். (பார்க்க எபி 10:25) 2. ஏனென்றால், கிறிஸ்தவ நண்பர்களுகிடையே உள்ள ஐக்கியம், (Christian Fellowship) சபைக்கு மாற்றாக ஒருபோதும் இருக்க முடியாது. உங்களுடைய நண்பர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கும்பொழுது, உங்களுடைய எண்ணங்களுக்கும், வாழ்க்கை முறைகளுக்கும் ஒத்து இருக்கிறவர்வைகளை தேர்ந்தெடுக்கிறீர்கள். ஆனால், தேவனோ, ஒருவரிடத்திலிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளுவதற்காகவே, சபையில் பலதரப்பட்ட மக்களை வைக்கிறார். (பார்க்க தீத்து 2:1-10). 3. ஏனென்றால், வரங்கள், சபையில் அங்கத்தினராக உள்ளவர் மட்டுமே, சரியான விதத்தில் பயன்படுத்த முடியும். வரங்கள், பொதுவாக, சரியான விதத்தில் பயன்படுத்தபடுவதற்கும் […]

Read More

நமது இரட்சகரின் தனிப்பட்ட ஜெபம் || Our Saviour’s Private Prayer — Charles.H.Spurgeon.

“சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.” (மத்தேயு 6:39).  நம்முடைய இரட்சகருடைய தனிப்பட்ட ஜெபத்தில், முக்கியமாக அவருடைய சோதனை வேளையில், கற்றுக்கொள்ளவேண்டிய அற்புதமான விஷயங்களை நாம் பார்க்கலாம். முதலாவது, அது தனிமையான ஜெபமாய் இருந்தது. ஆம், அவர், தனக்கு பிடித்த மூன்று சீடர்களிடமிருந்தும்கூட தனித்து ஜெபம் பண்ணினார். எனக்கு அருமையான விசுவாசியே, முக்கியமாக, சோதனை வேளையில், உன்னுடைய தனி ஜெபத்தில் அதிகமாய் தரித்திரு. குடும்ப ஜெபம், சபை ஜெப கூட்டம், இது மட்டும் போதாது. இவைகள் முக்கியமானதாக இருந்தாலும், தனிப்பட்ட ஜெபம் மட்டுமே, தேவன் தவிர, வேறு ஒருவரும் இதை கேட்காததினால் அதிக தாக்கமுள்ளதாயும், சிறப்பானதாயும் இருக்கிறது. இரண்டாவதாக, அது தாழ்மையான ஜெபமாய் இருந்தது. லூக்கா, முழங்கால் படியிட்டார் என்று சொல்லுகிறார். மற்ற சுவிஷேகர்கள், “முகங்குப்புற விழுந்து” என்று சொல்லுகிறார். இதை […]

Read More

உண்மை கிறிஸ்தவம் போதிக்கும் 15 கொள்கைகள்- 15 Principles True Christianity Teaches -Grant Castleberry

– கிரான்ட் கேஸ்ட்ல்பெர்ரி (Grant Castleberry) 1.  கடவுள் ஒருவரே இப்பிரபஞ்சத்தின் இராஜாவாய், இப்பிரபஞ்சத்தை படைத்தவராய், அதனை அனைத்தும் ஆளுகை செய்கிறவராய்  இருக்கிறார்  என்று உண்மை கிறிஸ்தவம் போதிக்கிறது. (ஆதி 1:1; சங்கீ 47:7; சங்கீ 145:1; ரோமர் 14:17).ஆகையால், அனைத்து மக்களும், கடைசியாக அக்கடவுளுக்கு கணக்கு கூற வேண்டியவர்கள். (அப் 17:31). 2. கர்த்தருடைய வார்த்தை சத்தியமாயிருக்கிறது. ஏனென்றால், தேவன் ஒருவரே சத்தியத்தை  நிலைநாட்டுகிறவராய் இருக்கிறார் என்று உண்மை கிறிஸ்தவம் போதிக்கிறது. (யோவான் 17:17). இந்த சத்தியம், மனுக்குலத்திற்கு கொடுக்கப்பட்ட விசேஷ வெளிப்பாடான, தவறிழைக்காத, கடவுளால் அருளப்பட்ட வேத புத்தகம். (2 தீமோ 3:16). இந்த வார்த்தையின் மூலம், தேவன் இவ்வுலகத்தை ஆட்சி செய்கிற ராஜாவாய், நம்முடைய மீட்ப்பின் அவசியத்தையும், தேவன் அருளிய நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து அறிந்து கொள்கிறோம்.   3. கடவுள்தாமே, இறையாண்மை கொண்ட ஆட்சியாளராக, இறுதி அதிகாரத்தை கொண்டிருப்பதால், அவர் மட்டுமே நீதியின் […]

Read More

சபைக்கும் நமக்கும் மிகப்பெரிய தேவையான ஒன்று. THE CHURCH’S AND OUR GREATEST NEED.

— Dr.Joel R Beeke இன்றைய நாளில் நடைமுறைபடுத்தவேண்டிய பரிசுத்தம். Holiness In Practice Today 1. தேவன் உன்னை பரிசுத்தத்திற்கென்று அழைத்திருக்கிறார். “தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.” (1 தெச 4:7). கடவுள், நம்மை எதற்கு அழைத்தாலும் அது அவசியமானது, முக்கியமானது. அவருடைய அழைப்பே, பரிசுத்தத்தை நாடவும், அதை பயிற்சி செய்யவும் நம்மை தூண்ட செய்ய வேண்டும். 2. உன்னுடைய நீதிமானாகுதல் மற்றும் தெரிந்துகொள்ளுதலில் பரிசுத்தமே அத்தாட்சியாய் இருக்கிறது. பரிசுத்தமாகுதல், நீதிமானாக்கப்படுதலின் அபரிதமான வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாய் இருக்கிறது. (1 கொரி 6:11). இவை இரண்டும் தனக்குரிய தனித்துவத்தை கொண்டிருந்தாலும், ஒருபோதும் பிரிக்க முடியாதது. கிறிஸ்துவுக்குள், கிறிஸ்துவின் மூலமாய், நீதிமானாகுதலானது, தேவனுடைய பிள்ளையானவன், பரலோகத்திற்கு செல்லுவதற்கு தைரியத்தையும், அதற்குண்டான உரிமையையும் கொடுக்கிறது. பரிசுத்தமாகுதலானது, பரலோகத்திற்கு தகுதி உடையவனாக்கவும், தேவையான ஆயத்தத்தையும் கொடுக்கிறது. தெரிந்துகொள்ளுதலில் கூட பரிசுத்தத்தை நாம் பிரிக்க முடியாது. “கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், […]

Read More

ஆண்டவர் சுகவீனத்தை பயன்படுத்துகிறாரா? – ஜே.சி.ரைல். Does God Use Sickness? – J.C.Ryle.

நான் சுகவீனத்தை குறித்து சிந்திக்கும்படியாய் உங்களை அழைக்கிறேன். இது நம்முடைய ஒவ்வொருத்தருடைய வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒன்றாய் இருக்கிறது. 1.உலகலாவியது: சுகவீனம் உலகலாவியது, எங்கும் உள்ளது. இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. ஆணோ, பெண்ணோ, குழந்தைகளோ சுகவீனப்பட்டு மரிக்கின்றனர். ஏன் சுகவீனம் உலகலாவியது? இதற்கு வேதம் கூறும் பதிலே போதுமானதாயிருக்கிறது. ஒன்றே ஒன்று, இந்த உலகத்திற்கு வந்து மனிதனுடைய அத்தனை ஆதி உரிமைகளை பறித்து போட்டு விட்டது. அந்த ஒன்று ‘பாவம்’. “பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தித்ததுபோலவும்..” (ரோமர் 5:12) உலகத்திலே காணப்படுகிற சுகவீனம், நோய், வலி, மற்றும் உபத்திரவம் அனைத்திற்கும் காரணம் பாவமாயிருக்கிறது. (ஆதி 3:17-19) 2.பொதுவான பயன்கள்: சுகவீனம் நன்மை பயக்குமா? என்ற கேள்வியை இவ்வுலகத்தில் காணப்படும் நோய்கள், வலிகள் போன்றவற்றை தேவனுடைய அன்போடு  ஒப்பிட்டு பார்க்க இயலாதவர்களை பார்த்து  கேட்கிறேன். நல்லா யோசித்து பாருங்கள், மக்கள், தங்கள் வியாபாரத்தில், எதிர்காலத்திலே லாபத்தை பெறும் நோக்கத்துக்காக, தற்காலத்திலே எத்தனை […]

Read More

The Christian’s never-failing resort in every case, in every plight – C. H. Spurgeon. கிறிஸ்தவனின் ஒருபோதும் தவறாத புகலிடம் – சி. எச் ஸ்பர்ஜன்.

“நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.”  (பிலிப்பியர் 4:6) ஜெபம் என்பது ஒவ்வொரு விஷயத்திலும், ஒவ்வொரு அவல நிலையிலும் கிறிஸ்தவனின் ஒருபோதும் தவறாத புகலிடமாய் இருக்கிறது. உங்கள் வாளைப் பயன்படுத்த முடியாதபோது, ​​நீங்கள் அனைத்து விதமான ஜெபம் என்கிற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளலாம். உங்கள் துப்பாக்கியில் பயன்படுத்தும் வெடி தூள் ஈரமாக இருக்கலாம், உங்கள் வில்லினுடைய கயிறு அறுபடலாம் – ஆனால் அனைத்து விதமான ஜெபம் என்கிற ஆயுதம் எப்போதும் ஆயத்தமாகவே இருக்கிறது. எதிரியானவன் ஈட்டியைப் பார்த்து சிரிக்கலாம் – ஆனால் அவன் ஜெபத்தை பார்த்து நடுங்குகிறான். வாள் மற்றும் ஈட்டிக்கு புதுபிப்பு தேவை – ஆனால் ஜெபம் ஒருபோதும் துருப்பிடிக்காது; நாம் அதை மிகவும் மலுங்கினது என்று நினைக்கும்போதுதான் – அது தன் வேலையை மிகச் சிறந்ததாக செய்கிறது. ஜெபம் என்பது ஒரு திறந்த கதவு, அதை யாரும் மூட […]

Read More

ஒரு இருதய சீர்திருத்தம் – A Reformation of the Heart – Joel Beeke.

ஒரு இருதய சீர்திருத்தம் – ஜோயல் பீக்கி. “தேவபக்திகேதுவாக முயற்சிபண்ணு.” ( 1 தீமோ 4:7) சீர்திருத்தத்தின்  ஐந்நூறாம் நூற்றாண்டை கொண்டாடுகிற  இவ்வேளையில், ​​இது  சம்பந்தமாக உருவாக்கிய அனைத்து ஆக்கங்கள், கட்டுரைகள், புத்தகங்கள்,கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் சுற்றுப்பயணங்கள் ஆகியவற்றைக் கொண்டு, சீர்திருத்தம் எதைப் பற்றியது என்று கேட்பது மிகவும் அவசியமானது.  பிரதானமாக, விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்குதல் அல்லது இரட்சிப்பின் கோட்பாடுகளை குறித்து சிலர் சொல்லலாம். இன்னும் சிலர், வேதப்பூர்வமான ஆராதனை அல்லது கத்தோலிக்க மத போதனைக்கு எதிராக வேத அதிகாரத்தை குறித்து பேசலாம். சீர்திருத்தத்தைக்குறித்து நாம் அடிக்கடி மறந்து விடும் ஒரு காரியம் என்னவென்றால், “இருதய சீர்திருத்தத்தின் எழுப்புதல்.” (rivival of a reformation of the heart) அல்லது ஜோன் கால்வின் கூறும் சொற்றொடர், biblical pietas (piety), வேதபூர்வ பக்தி. இந்த காரியம், குறிப்பாக சீர்திருத்தவாதிகளின் வாழ்விலும், அவர்களுடைய இறையியலிலும், பின்னால் எழும்பின தூய்மைவாதிகளின் வாழ்விலும் காணப்பட்டது. இந்த […]

Read More