போதகரின் குணத்தை பற்றிய இந்தத் தொடரில் இதுவரை, போதகரின் பக்தி மற்றும் அவரது ஊழியத்தின் மீது போதகரின் பரிசுத்தத்தின் பங்கைக் கருத்தில் கொண்டோம். அந்த கட்டுரைகள் பெரும்பாலும் எச்சரிக்கையாக இருந்தன, ஊழியத்தில் வரும் குறிப்பிட்ட சோதனைகளுக்கு எதிராக போதகர்களை எச்சரித்தன. ஆனால் போதக குணத்தில் வளர ஒரு போதகர் நேர்மறையாக எதை வளர்க்க வேண்டும்? ஸ்பர்ஜனின் முதல் பதில், போதகரின் தனிப்பட்ட ஜெபத்தில் வெளிப்படுத்தும், கிறிஸ்துவுடன் கூடிய ஐக்கியத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை கொண்டிருப்பதே ஆகும். பிரச்சனை : ஊழியத்தில் அதிகாரப்போக்கு ஒரு ஊழியன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்று, சம்பிரதாயம் அல்லது அதிகாரப்போக்கு என்று ஸ்பர்ஜன் அழைக்கிறார். அவர் சொல்லுவதை இங்கு கவனியுங்கள்: “ஒரு ஊழியன் சந்திக்கக்கூடிய மிக மோசமான சோதனை, ஒரு அதிகாரபோக்குள்ள நடவடிக்கையின்படி செய்வதாகும். ஒரு அதிகாரப்போக்கு கொண்ட ஊழியனாக கடமைக்கென்று வேத வாசிப்பது, அவ்வண்ணமாக ஜெபிப்பது, அனைத்து ஆவிக்குரிய காரியங்களை தனிப்பட்ட விதத்தில் எடுத்துக்கொள்ளாமல், ஊழியன் […]
Read Moreபோதகரின் தனிப்பட்ட ஜெபம் – ஜாப் சாங். The Pastor’s Private Prayer – Geoff Chang.
