ரொபர்ட் மொர்ரே மெக் செய்னி (1813-1843) Confessing Our Sins Robert Murray McCheyne (1813-1843) மனசாட்சியைக் குற்ற உணர்வில்லாமல் காத்துக் கொள்வதற்காக நான் இன்னுமதிகமாக என்னுடைய பாவங்களை அறிக்கையிடவேண்டும் என்று உணர்கிறேன். நான் மற்றவர்களோடு இருந்தாலும், படிப்பில் இருந்தாலும், அல்லது பிரசங்கித்துக் கொண்டிருந்தாலும், பாவத்தை கண்ட அதே கணத்தில் அதை அறிக்கையிட வேண்டுமென்று நினைக்கிறேன். ஆத்துமா, பாவத்தை அருவருக்க வேண்டும். நான் பாவத்தை அறிக்கையிடாமல் தொடர்ந்து என் கடமையைச் செய்வேனானால், நான் பாரமுள்ள மனச்சாட்சியோடு செல்கிறேன், தொடர்ந்து பாவத்தோடு பாவத்தைக் கூட்டிக் கொள்கிறேன். ஒரு சில குறிப்பிட்ட வேளைகளில் முந்தைய மணி நேரங்களில் என்னுடைய பாவங்களை உண்மையாக அறிக்கையிட்டு, அவைகளை முழுமையாக விட்டுவிடுவதை நாட வேண்டுமென்று நினைக்கிறேன். என்னுடைய பாவத்தின் தீய தன்மையைக் காண நான் அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும். என்னை நான் ஆதாமின் குற்றந்தீர்க்கப்பட்ட கிளையாக, கர்ப்பத்திலிருந்தே தேவனுக்கு விரோதமான இயல்பில் பங்குகொண்டவனாக, முற்றிலும் தீமையினால் […]
Read More