பரிசுத்தமற்ற இருதயத்தின் அறிகுறிகள். – தொமஸ் வாட்சன்

Published February 28, 2025 by adming in Pastor's Blog
  1. அறியாமை கொண்ட இருதயம் தூய்மையற்ற இருதயம். பாவத்தை குறித்து, கிறிஸ்துவை குறித்து அறியாத இருதயம், தூய்மையற்ற இருதயம். அறிவுதான் இருதயத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருகிறது. நீதிமொழிகள் 19:2 சொல்லுகிறது, “ஆத்துமாஅறிவில்லாமலிருப்பது நல்லதல்ல” அறியாமை, கடவுளை நேசிக்காது, விசுவாசம் இருக்காது, கடவுளை சரியான விதத்தில் ஆராதிக்காது. அறியாமை, பெருமையின் சிகரம். அனைத்து தவறுக்கும் இதுவே காரணம். ஆக, அறியாமை கொண்ட இருதயம், தூய்மையற்ற இருதயம்.
  2. சுய – நீதி கொண்ட இருதயம், தூய்மையற்ற இருதயம். இங்கு பரிசுத்தத்திற்கே வேலையில்லை. “நான் …… எனக்கு ஒரு குறைவுமில்லை” (வெளி 3:17). தன்னுடைய உண்மையான நிலையை அறியாதபடி, தன்னையே பெருமைபராட்டிக்கொள்ளும் இருதயம். 
  3. அக்கிரம சிந்தை கொண்ட இருதயம், பரிசுத்தமற்ற இருதயம். (சங்கீதம் 66:18). ஆம், இவ்விருதயம், பாவத்தில் இருக்கும் இருதயம், அதில் சந்தோஷப்படும் இருதயம்.
  4.  அவிசுவாசமான இருதயம், பரிசுத்தமற்ற இருதயம். எபிரெயர் 3:12 “அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம்” என்று சொல்லுகிறது. அவிசுவாசம், கடவுளை எதிர்க்கிறது, இருதயத்தை கடினப்படுத்துகிறது, மாய்மாலத்தை ஊக்குவிக்கிறது, மனுஷ பயத்தை உருவாக்குகிறது.
  5. பொருளாசையுள்ள இருதயம், பரிசுத்தமற்ற இருதயம். இதுவே திருப்தியற்ற இருதயம்,திருட்டிற்க்கு காரணமான இருதயம், கொலைக்கு காரணமான இருதயம்

No Response to “பரிசுத்தமற்ற இருதயத்தின் அறிகுறிகள். – தொமஸ் வாட்சன்”

Comments are closed.